பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் ரிஷப் பண்ட் தனக்குத்தானே ஃபீல்டிங் செட்டப் செய்து ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரவிட்டிருக்கிறார். இந்த சுவாரசிய சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று மூன்றாவது நாளில் இந்திய அணி மதிய உணவு இடைவேளையின்போது மூன்று விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 432 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் களத்தில் சதத்திற்கு நெருக்கமாக ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் நிற்கிறார்கள்.
638 நாட்கள் கழித்து அதிரடி
2022 ஆம் ஆண்டு இறுதியில் மோசமான சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு திரும்பி வந்ததோடு,பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் திரும்பி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 638 நாட்கள் கழித்து, தான் திரும்பி வந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். எந்த இடத்தில் விட்டு சென்றாரோ அதே இடத்தில் இருந்து விளையாடி அசத்தி இருக்கிறார்.
தனக்குத்தானே ஃபீல்டிங் செட்டப்
இன்று மூன்றாவது நாளில் தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விளையாட வந்தார்கள். ஆரம்பத்தில் விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து பொறுப்பாக விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக ரன்கள் எடுத்து அணியை நகர்த்தி வந்தார்கள். இதற்கு அடுத்து இறுதி கட்டத்தில் அதிரடியில் பங்களாதேஷ் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார்கள்.
இதற்கு இடையில் பங்களாதேஷ் கேப்டன் ஒரு குறிப்பிட்ட ஓவருக்கு இடையில் ஃபீல்டிங் செட் அப் செய்து கொண்டிருந்த பொழுது, ரிஷப் பண்ட் பக்கத்தில் ஒரு ஃபீல்டர் வழக்கமாக இருக்க வேண்டும் ஆனால் அவரை நிறுத்தவில்லை. இந்த நிலையில் ரிஷப் பண்ட் பங்களாதேஷ் கேப்டனை அழைத்து “இங்கே பாருங்கள் இந்த இடத்தில் நீங்கள் ஒரு பீல்டரை வைக்க வேண்டும். இங்கே அவரை கொண்டு வந்து நிறுத்துங்கள்” என்று சொல்ல கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள் அனைவருமே சிரித்து விட்டார்கள்.
இதையும் படிங்க : சச்சின் மாதிரி விராட்டுக்கும் இங்க பேட்டிங் செய்ய பிடிக்கல.. ஆனா அது நல்ல விஷயம்தான் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து
இதில் கூடுதல் சுவாரசியமாக ரிஷப் பண்ட் குறிப்பிட்டு சொன்ன ஃபீல்டிங் பொசிஷனில் பங்களாதேஷ் கேப்டனும் ஒரு ஃபீல்டரை கொண்டு வந்து நிறுத்தி ஆச்சரியப்படுத்தினார்.இன்று களத்தில் நடந்த இந்த நிகழ்வு கொஞ்ச நேரம் மைதானத்தில் இருந்தவர்களை மட்டும் இல்லாமல் தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களையும் நகைச்சுவைக்கு உள்ளாகியது.
Rishabh Pant setting the field for Bangladesh. 😆🔥
— Johns. (@CricCrazyJohns) September 21, 2024
– What a character, Pant. pic.twitter.com/sRL69LPgco