கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விலகியதால் அந்த அணி மோசமாக சரிந்தது. இந்த நிலையில் மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணியை பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா தூக்கி நிறுத்தி அசத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதனுடைய முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் மூன்றாவது ஆண்டில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா யாரும் எதிர்பாராத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேடிங் ஆகினார். இது குஜராத் டைட்டன்ஸ் அணியை கடுமையாக பாதித்தது.
நெக்ராவின் அற்புதமான திட்டங்கள்
இந்த முறை மெகா ஏலத்திற்கு முன்பாக காயத்திலிருந்து திரும்பி வந்த முகமது ஷமியை தைரியமாக நெக்ரா கழட்டிவிட்டார். எப்பொழுதும் வேகப்பந்து வீச்சு யூனிட்டை சிறப்பாக உருவாக்கும் அவர் இந்த முறை முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இசாந்த் சர்மா, அர்ஷத் கான், ககிஷோ ரபாடா ஆகியோரை வைத்து சிறப்பாக உருவாக்கினார்.
இதைத்தொடர்ந்து ஏலத்திற்கு முன்பாக அன்கேப்ட் பிளேயர் லிஸ்டில் வெறும் நான்கு கோடி ரூபாய்க்கு ஷாருக்கானை தக்க வைத்தார். இத்துடன் அணியின் கேப்டன் கில் மற்றும் அனுபவ வீரர்கள் ரசித் கான், திவாட்டியா, சாய் கிஷோர் ஆகியோரையும் தக்க வைத்துக் கொண்டார். இதன்மூலம் பேட்டிங் யூனிட் ஏலத்திற்கு முன்பாகவே ஓரளவுக்கு செட்டாகி இருந்தது.
களத்தில் செய்த மாஸ் மூவ்
இதைத் தொடர்ந்து ஏலத்தில் இருந்து ஜோஸ் பட்லரை கொண்டு வந்ததும் அந்த அணி பலமானதாக மாறிவிட்டது. ராஜஸ்தான் அவரை தக்க வைக்காமல் பெரிய தவறு செய்ததை நெக்ரா பயன்படுத்திக் கொண்டார். இத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வரும் ரூதர்போர்டை எந்த அணியும் கண்டுகொள்ளாத நிலையில், குறைந்த விலைக்கு அவரை வாங்கி அசத்தினார்.
இதைத் தொடர்ந்து தங்களுடைய பந்துவீச்சாளர்களில் சிராஜை புதிய பந்தில் பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீச வைத்தார். இவர்களுடன் பந்தை ஸ்விங் செய்ய முடிந்த அர்ஷத் கான் மற்றும் இஷாந்த் சர்மாவையும் பயன்படுத்தினார். அதே சமயத்தில் நல்ல உயரமும் வேகமும் அதனால் பவுன்சும் எடுக்க முடிந்த பிரசித் கிருஷ்ணாவை மிடில் ஓவர்களுக்கு கொண்டு வந்தார். இப்படியான பவுலர்களை மிடில் ஓவரில் விளையாடுவது கடினம்.
இதையும் படிங்க : என்கிட்ட வந்து ரசித் கானை பத்தி இதை கேட்கலாமா?.. இங்கிலாந்து வீரருக்கு சாய் கிஷோர் அசத்தல் பதில்
இத்துடன் நூர் அகமதை அதிக விலை கொடுத்து சிஎஸ்கே வாங்கி விட்டதால், அவர் அளவுக்கு தாக்கம் தரக்கூடிய ஆனால் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய ஏற்கனவே அணியில் இருந்த சாய் கிஷோரை மீண்டும் வாங்கிக் கொண்டார். இந்த வகையில் பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட் என இரண்டையும் அற்புதமாக வலிமையாக உருவாக்கினார். தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணியை மீண்டும் தூக்கி நிறுத்தி இருக்கிறார். அந்த அணி புள்ளி பட்டியலில் எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.