இன்று துவங்கிய துலீப் டிராபியில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜின் இந்தியா சி அணி பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறி நிற்கிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ருதுராஜ் இந்தியா சி அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு இந்திய அணி விளையாடும் டெஸ்ட் தொடர்களை கருத்தில் கொண்டு இவ்வாறு ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது.
சரிந்த சி அணி
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தியா சி அணி 76 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே நூறு கண்களில் ஆல் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் சிறப்பாக விளையாடிய அக்சர் படேல் அணியை ஓரளவுக்கு மீட்டு கொண்டு வந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன் மற்றும் தேவ்தத் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார்கள்.
இந்தியா டி அணி தனது முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. அக்சர் படேல் 118 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இந்தியா சி அணியின் பந்துவீச்சில் அன்சுல் காம்போஜ் 2, ஹிம்மனசு சவுகான் 2, வைசாக் விஜயகுமார் 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
ருதுராஜ் ஏமாற்றம்
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா சி அணி இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 73 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. தற்போது களத்தில் அபிஷேக் கோரல் 32, பாபா இந்திரஜித் 14 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்கள். பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றிஇருக்கிறார்கள்.
இதையும் படிங்க : 97/7.. அண்ணன் ஏமாற்றினாலும்.. தம்பி முஷீர் கான் ஆச்சரியமான சதம்.. கில் அணிக்கு நெருக்கடி.. துலீப் டிராபி 2024
இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சாய் சுதர்சன் 7, கேப்டன் ருதுராஜ் 5 ரன்களில் வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து ஆரியன் ஜுரல் 12, ரஜத் பட்டிதார் 13 ரன்கள் எடுத்துஆட்டம் இழந்தார்கள். முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டதால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பொழுதும் ருதுராஜ் அணி தற்பொழுது இக்கட்டான நிலையில் இருக்கிறது.