பங்களாதேஷ் அணிக்கு எதிராக கான்பூரில் இன்று துவங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரின் மகத்தான உலக சாதனை ஒன்றை உடைப்பார்.
இன்று உத்தரப்பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆச்சரியப்படுத்தும் விதமாக பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கவலை தரும் விராட் கோலி
தற்போது விராட் கோலி நல்ல பேட்டிங் ஃபார்மில் இல்லை என்று சொல்ல முடியாது. அவருடைய பேட்டிங் டச் சிறப்பாக இருந்து வருகிறது. ஆனால் அவர் எதிர்பாராத பந்துக்கு எதிர்ப்பாராத நேரத்தில் விக்கெட்டை மிக சுலபமாக கொடுப்பது கவலை அளிக்க கூடிய ஒன்றாக மாறி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தால் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைப்பார். இந்த சாதனை தற்போது சச்சின் டெண்டுல்கர் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடையும் சச்சின் சாதனை
சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்கள் எடுத்து அதிவேகமாக 27 ஆயிரம் ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். தற்போது விராட் கோலி 593 இன்னிங்ஸ்களில் 26, 1965 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 35 ரன்கள் எடுத்தால் இந்த உலக சாதனையை படைப்பார்.
இதையும் படிங்க : 2025 ஐபிஎல்.. கம்பீர் இடத்தில் சிஎஸ்கே பிராவோ.. சர்ப்ரைஸ் கொடுத்த கேகேஆர்.. வாய்ப்பு வந்தது எப்படி?
மேலும் விராட் கோலி இந்த போட்டியில் 129 ரன்கள் எடுத்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரராக இணைவார். விராட் கோலிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஒன்பதாயிரம் ரண்களை கடந்தவர்களாக இருக்கிறார்கள்.