“இப்படி இருந்தால் ஆர்.சி.பி எப்படி சாம்பியன் ஆக முடியும்” – ரகசியத்தை வெளியிட்ட க்ரிஷ் கெயில்!

0
108

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற 31ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐபிஎல் வரலாற்றில் 16வது சீசன் ஆகும். 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று முதல் சாம்பியன் ஆனது.

இதுவரை நடைபெற்ற 15 ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இவை தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும் ஹைதராபாத் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.

- Advertisement -

பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் கடந்த 15 சீசன்கள் ஐபிஎல் தொடர்களில் விளையாடும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை . குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்று முறை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது . ஆனாலும் அவர்களால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி ஒரு ராசி இல்லாத அணியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

விராட் கோலி கிரிஸ் கெயில் ஏ.பி டிவில்லியர்ஸ் ஷேன் வாட்சன் கெவின் பீட்டர்சன் மிச்செல் ஸ்டார்க் ஒன்று திறமையான வீரர்கள் கடந்த காலங்களில் அந்த அணியில் இருந்தும் அவர்களால் கோபியை வெல்ல முடியாதது ஒரு ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூர் அணியின் முன்னாள் துவக்க வீரரும் யுனிவர்சல் பாஸ் க்ரிஷ் கெயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

ஜியோ சினிமாவின் ஐபிஎல் தொடர்பான நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா மற்றும் நியூசிலாந்து அணியின் வீரர் ஸ்காட் ஸ்டைரீஸ் ஆகியோருடன் கலந்து கொண்டு பேசிய க்ரிஸ் கெயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்விக்கான காரணத்தை பகிர்ந்து கொண்டார். இது பற்றி பேசிய கெயில்” ஆர் சி பி அணியில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான வீரர்கள் தங்களை அந்த அணியின் ஒரு பகுதியாக நினைக்கவில்லை எனக் கூறினார். அணியின் மொத்த பார்வையும் எனது மீதும் விராட் மற்றும் ஏபிடி ஆகியோரின் மீது இருப்பதாக அந்த வீரர்கள் நினைத்தனர். அவர்கள் தங்களை அணியின் ஒரு பகுதியாக நினைக்கவில்லை. இப்படியாக வீரர்களின் மனநிலை இருக்கும் போது ஒரு அணியால் கோப்பையை வெல்வது கடினம் என கூறினார். அதுதான் ஆர்சிபி அணி இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாததற்கு காரணமாக தான் நினைப்பதாக தெரிவித்தார்.

- Advertisement -

யுனிவர்சல் பாஸ் கிரீஸ் கெயில் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது . இதுவரை 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடு இருக்கும் கெயில் 4965 ரன்கள் குறித்துள்ளார். இதில் ஆறு சதங்களும் 31 அரை சதங்களும் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 175. இதுதான் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும்.