பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவிந்திர ஜடேஜா ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினால், தனித்த இந்திய வீரராக மெகா சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.
இந்த தொடரின் முதல் போட்டியின் நாளை மறுநாள் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்திய அணி தனது 45 நாள் ஓய்வுக்குப் பிறகு களம் இறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறிய அணிக்கு எதிரான தோல்வியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பாதிக்கும் என்பதால் இந்திய அணி மிகக் கவனமாக இந்த தொடருக்கு தயாராகி வருகிறது.
வித்தியாசமான ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின் போல மிகவும் திட்டமிட்டு பந்து வீசக்கூடியவர் கிடையாது. அதேபோல தன்னை நம்பி பந்து வீசாமல் ஆடுகளத்தை நம்பி பந்து வீசக்கூடியவர். மேலும் அவர் பந்தை குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து வீசுவதின் மூலமாக விக்கெட் கைப்பற்ற கூடியவர். மேலும் பந்தில் இவரது வேகம் இவருக்கு ஒரு கூடுதல் நன்மையை உருவாக்குவதாக அமையும்.
இதன் காரணமாக ஏதாவது ஒரு பந்து ஆடுகளத்தில் பட்டு மாறுதலாக எழும் பொழுது பேட்ஸ்மேனுக்கு இயல்பாகவே பிரச்சனை உண்டாக ஜடேஜா விக்கெட்டை கைப்பற்றி விடுவார். இதன் காரணமாக ஜடேஜாவின் பந்துவீச்சு டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் விரும்பாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
சென்னையில் காத்திருக்கும் தனித்த சாதனை
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா 294 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேற்கொண்டு அவர் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றும்பொழுது இந்திய அணிக்காக முதன்முதலில் 300 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இடது கை சுழல் பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை படைப்பார். எப்படியும் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இதை ரவீந்திர ஜடேஜா எட்டுவது உறுதியான ஒன்றாகவே இருக்கிறது.
இதையும் படிங்க : தோனி கோலியின் அந்தத் திறமை.. இந்த பையன் கிட்டதான் இருக்கு.. அடுத்த சூப்பர் ஸ்டார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் :
அனில் கும்ப்ளே – 619
ரவிச்சந்திரன் அஸ்வின் – 516
கபில் தேவ் – 434
ஹர்பஜன் சிங் – 417
ஜாகீர் கான் – 311
இஷாந்த் சர்மா – 311
ரவீந்திர ஜடேஜா – 294