தோனி கோலியின் அந்தத் திறமை.. இந்த பையன் கிட்டதான் இருக்கு.. அடுத்த சூப்பர் ஸ்டார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
83
Aakash

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக வருவதற்கு ஒரு இளம் வீரரிடம் குறிப்பிட்ட திறமை இருப்பதாக ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

தற்போது இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார்கள் ஆக இருந்து வரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சில ஆண்டுகளில் எப்படியும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார்கள். எனவே இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் யார்? என்கின்ற தேடல் ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் அதிசயம் நடக்குமா?

இதுவரையில் இந்திய கிரிக்கெட்டில் வலதுகை பேட்ஸ்மேன்கள் மட்டுமே சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி விராட் கோலி என இந்த பட்டியல் தொடர்கிறது. இந்த முறை ஜெய் ஸ்வால் போன்ற இடது கை வீரர் ஒருவர் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக வர முடியுமா என்கின்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

சௌரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் புகழ்பெற்றவர்களாக இருந்த பொழுதும் கூட அவர்கள் விளையாடிய காலகட்டத்தில் சச்சின் மற்றும் விராட் போன்ற வலது கை பேட்ஸ்மேன்கள்தான் புகழில் உச்ச நிலையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் போட்டி

இந்த நிலையில் இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு இருந்த ஒரு முக்கியமான திறமை தற்போது வளர்ந்து வரும் வீரர் சுப்மன் கில் இடம் இருப்பதாக கூறியிருக்கிறார். எனவே அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஆக உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : அரிய அந்த திறமை இருக்க பையன்.. ப்ளீஸ் ஆஸி தொடருக்காவது செலக்ட் பண்ணுங்க – தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சுப்மன் கில்லின் பெரிய திறமை என்னவென்றால் அவர் ஆட்டத்தின் துடிப்பை வெகு சீக்கிரத்தில் புரிந்து கொண்டிருக்கிறார். சில வீரர்கள் விரைவாக புரிந்து கொள்கிறார்கள். சில வீரர்கள் இறுதி வரையில் புரிந்து கொள்வதே கிடையாது. விராட் கோலி ஆட்டத்தின் துடிப்பை சீக்கிரத்தில் புரிந்து கொண்டவர். மகேந்திர சிங் தோனி ஒருநாள் கிரிக்கெட்டின் துடிப்பை வெகு சீக்கிரத்தில் புரிந்து கொண்டவர். இதுதான் வீரர்களே லெஜெண்ட் ஆக்குகிறது. கில்லுக்கும் இந்த திறமை இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -