“இந்தியா தோற்றா பரிசு தயாரா இருக்கு.. இவங்கதான் தோற்கடிக்க போறாங்க!” – மைக்கேல் வாகன் சர்ச்சை பேச்சு!

0
14543
Vaughan

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் எட்டு போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளையும் அபாரமான முறையில் வென்று இருக்கிறது.

இதற்கு உலகெங்கும் இருந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பாராட்டுகள் வந்தாலும் கூட, அதைவிட அதிகமாக இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் நிறைய வருகிறது. குறிப்பாக இந்திய அணி எந்த இடத்தில் தோல்வி அடையும் என்று பலர் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராஸா இந்திய அணியின் தொடர் வெற்றிகளை ஏற்றுக்கொள்ள முடியாமல், இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி உடன் சேர்ந்து ஏதோ ஏமாற்று வேலைகள் செய்வதாக குற்றம் சாட்டி இருந்தார்.

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் இதே போல குற்றச்சாட்டை வைத்து பேசி அந்த அணியின் ஜெயவர்த்தனாவை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இப்படி தொடர்ச்சியாக இந்திய அணி நிர்வாகத்தின் மீதும், இந்திய அணியின் தோல்வி மீதும் வெளியில் பல குற்றச்சாட்டுகளையும் எதிர்பார்ப்பையும் முன்வைத்து காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் தற்பொழுது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் இணைந்திருக்கிறார். அவர் இது சம்பந்தமாக நகைச்சுவை போல ஒரு வித்தியாசமான கருத்தை வெளியிட்டு பேசியிருக்கிறார். ஆனால் அது சர்ச்சைக்குரிய முறையில் இருக்கிறது.

மைக்கேல் வாகன் பேசும்பொழுது “வாசிம் ஜாஃபர் எனது முதல் டெஸ்ட் விக்கெட். அவர் லார்ட்ஸ் மைதானத்தில் கெவின் பீட்டர்சன் இடம் கேட்ச் ஆனார். என்னை அவர் இரண்டு முறை சமூக ஊடகத்தில் வென்று இருக்கிறார்.

ஆனால் அவரது சமூக வலைதள கணக்கை அவர் நிர்வகிக்கவில்லை. இது ஒரு தொழில் முறை நிபுணரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா தோற்கும் பொழுது அதற்கான பரிசை வைத்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்!