தற்போது இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா இடத்திற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் இயான் பிஷப் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பையை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சன் வைத்திருக்கிறார். இந்த நிலையில் சாய் சுதர்சனை இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் இல்லாமல் டி20 அணியிலும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கிறது.
அபிஷேக் ஷர்மாவின் கவலையான நிலைமை
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு சதத்தை அடித்து இருந்த போதும் கூட, மற்ற போட்டிகளில் பெரிய அளவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. மேலும் மொத்த ஹைதராபாத் அணியும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக கடந்த ஆண்டு போல அமைக்கப்படவில்லை. இந்த ஆண்டு முடிந்த வரையில் பந்து மற்றும் பேட்டுக்கு இடையே போட்டி சமமாக இருக்கும் வகையில் பிசிசிஐ பலவகையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக எடுத்ததும் அதிரடியில் ஈடுபடும் அபிஷேக் சர்மா மாதிரியான பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். அதே சமயத்தில் பந்தை பார்த்து சரியான முறையில் விளையாடும் சாய் சுதர்சன், விராட் கோலி போன்றவர்கள் பெரிய அளவில் ரன்கள் குவித்து வருகிறார்கள்.
சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இது குறித்து பேசி இருக்கும் இயான் பிஷப் கூறுகையில் “தற்போதைய நிலையில் அபிஷேக் ஷர்மாவுக்கு இந்திய டி20 அணியில் ஒரு நீண்ட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. திலக் வர்மா உடன் சேர்த்து தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அபிஷேக் ஷர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் இருந்தால், நிச்சயம் நான் அவரை இந்திய டி20 அணியில் வாய்ப்புக்கான வரிசையில் முன்னே வைப்பேன்”
இதையும் படிங்க : தனியாக கதறி அழுத வைபவ் சூரியவன்சி.. வாழ்க்கையை மாற்றிய விவிஎஸ் லக்ஷ்மன்.. ஐபிஎல்க்கு எப்படி வந்தார்?
” சாய் சுதர்சனுக்கு தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் கொடுக்கப்பட்டு வரும் பொறுப்பான ரோல் கொடுக்கப்படாமல் ‘ஆட்டம் இழப்பதை பற்றி கவலைப்படாமல், அடுத்த பெயருக்கு சென்று அதிரடியாக விளையாடு’ என்று புதிய ரோலை அவரிடம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தற்போது இந்திய டி20 அணியில் துவக்க இடத்திற்கான போட்டி என்பது பிரபஞ்சத்தின் பிரச்சினைகளை விட பெரிய பிரச்சனை” என்று கூறியிருக்கிறார்.