தனியாக கதறி அழுத வைபவ் சூரியவன்சி.. வாழ்க்கையை மாற்றிய விவிஎஸ் லக்ஷ்மன்.. ஐபிஎல்க்கு எப்படி வந்தார்?

0
443
Laxman

நேற்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்தில் அதிரடி சதம் அடித்த 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சியின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியதில் டிவிஎஸ் லக்ஷ்மன் மிகப்பெரிய பங்கை கொண்டு இருக்கிறார் என்கின்ற உண்மையை அவரது பயிற்சியாளர் மனோஜ் தெரிவித்திருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த வயதில் டி20 வடிவத்தில் சதம் அடித்தவர் என்ற சாதனையை நேற்று சூரியவன்சி படைத்தார். மேலும் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையையும் படைத்தார். எத்தனையோ ஜாம்பவான் இந்திய வீரர்கள் இருக்கும் நிலையில் 14 வயது சிறுவனான அவர் படைத்திருக்கும் இந்த சாதனை அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சூரியவன்சி வாழ்க்கை மாறிய இடம்

பீகாரில் மாவட்டங்களுக்கு இடையேயான சீனியர் கிரிக்கெட்டில் சூரியவன்சி மிகவும் சிறப்பான முறையில் ரன்கள் குவித்திருக்கிறார். இதன் காரணமாக இந்திய அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் சேலஞ்சர் கோப்பைக்கு சூரியவன்சி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவருடைய பேட்டிங் திறமையை பார்த்த விவிஎஸ் லக்ஷ்மன் அண்டர் 19 நான்கு நாடுகளுக்கு இடையேயான தொடருக்கும் இவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அதே சமயத்தில் இந்திய பி அணிக்காக இங்கிலாந்துக்கு எதிராக 36 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்த சூரியவன்சி தனியாக அறையில் அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது விவிஎஸ் லக்ஷ்மன் இங்கு ரன்களை பார்த்து மட்டுமே வீரர்களை தேர்வு செய்யவில்லை எனவும், வீரர்களின் திறமைகளை பார்த்துதான் தேர்வு செய்திருப்பதாகவும் கூறி அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

டிராவிட்டுக்கு கிடைத்த அறிமுகம்

இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன் இத்துடன் நின்றுவிடாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் தனது நண்பர் ராகுல் டிரா வீட்டுக்கு வைபவ் சூர்யவன்சியின் திறமையை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதுதான் நேற்று நடந்த மொத்த கதைக்கும் அழுத்தமான முதல் புள்ளியை வைத்திருக்கிறது.

இதையும் படிங்க : 14 வயது சிறுவன் 35 பந்தில் சதம்.. முன்கூட்டியே எச்சரித்த ஜோஸ் பட்லர்.. திட்டமிடாது விட்ட நெக்ரா

இந்திய அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை உருவாக்கிய ராகுல் டிராவிட் மிகவும் விருப்பத்துடன் வைபவ் சூரியவன்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அங்கிருந்து கடந்த நான்கு மாதங்களாக இவருக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தயார் செய்திருக்கிறார்கள். அதனுடைய பலனை நேற்று மொத்த உலகமே பார்த்து இருக்கிறது!

- Advertisement -