ஒரே 1 ரன்.. திரில் போட்டியில் ரெய்னா அணி தோல்வி.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் அதிரடி.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட் 2024

0
781
Suresh raina

இந்தியாவின் உள்நாட்டு தொடரான லெஜென்ஸ் லீக் 2024 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் டோயம் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி திரில்லர் வெற்றியை பெற்றுள்ளது.

இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய பென் டங்க் ஆட்டநாயகன் விருதை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்நாட்டுத் தொடரான லெஜென்ஸ் டிராபி லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் இரண்டாவது போட்டியில் பில் தலைமையில் ஆன இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும் ரெய்னா தலைமையிலான டோயம் ஹைதராபாத் அணிகளும். மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிட்டல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் பென் டன்க் 35 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 60 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு ரெய்னா தலைமையிலான ஹைதராபாத் அணி களம் இறங்கி விளையாடியது. நான்கு ஓவர்களில் 41 ரன்கள் குவித்த நிலையில் வால்டன் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அவரைத் தொடர்ந்து கிளார்க் 8 ரன்களும், குர்கரித் சிங் 28 ரன்களும் குவித்து வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் ரெய்னா ஆறு பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தார். இதில் தொடக்க ஆட்டக்காரரான ஒர்க்கர் மட்டுமே 52 ரன்கள் குவித்து ஆறுதல் அளிக்க இறுதிக்கட்டத்தில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது களத்தில் இருந்த ட்ரெகோ போபு வீசிய 20வது ஓவரில் ஒரு சிக்சரோடு இரண்டு அகல பந்துகள் உட்பட 16 ரன்கள் மட்டுமே குவித்ததால் இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி திரில்லர் வெற்றியை ருசித்துள்ளது. பந்துவீச்சில் குல்கர்னி மற்றும் ராகுல் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் போப்பு மற்றும் சுயல் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதையும் படிங்க:கேஎல் ராகுல் இந்த ஒரு விஷயத்தை உணர்ந்தா.. வேற லெவல் பிளேயரா மாறுவாரு – ரவி சாஸ்திரி பேட்டி

இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த ட்ரெகோ 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 38 ரன்கள் குவித்தார். இந்தியா கேப்பிட்டல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த 60 ரன்கள் குவித்த பென் டன்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார். பென் டன்க் ஐபிஎல் தொடரில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -