என் குழந்தைகளுக்கு இந்த இந்திய வீரர் ஆடறத காட்டறேன்.. ஏன்னா அவர் பெரிய மாஸ்டர் – இங்கிலாந்து இயான் பெல் பேட்டி

0
283
Ian

இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் பெல் இந்திய அணி தற்போது திறமையாக இருப்பது குறித்தும், இந்திய அணியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீரர் எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

தற்போதைய கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மூன்று நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இருக்கின்றன. இதில் இந்திய அணி உலக கிரிக்கெட்டில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணங்கள் குறித்து இயான் பெல் பேசியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியை கடந்து செல்வது கடினம்

இயான் பெல் பேசும்பொழுது ” நீங்கள் விளையாட்டைப் பற்றி பேசும் பொழுது விராட் கோலியை கடந்து செல்வது கடினம். அவரது கவர் டிரைவ் என்பது மட்டும் இல்லாமல், பேட்டிங் மீது அவருக்கு இருக்கும் ஆசை, விளையாட்டிற்கு அவர் கொடுக்கும் விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு என்பது அளவிட முடியாதது. விளையாட்டில் அவர் எப்படி செல்கிறார்? என்பது மிகவும் முக்கியமானது”

“மூன்று வடிவ கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த வடிவத்தில் கவர் டிரைவ் விளையாடினாலும் அது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். விராட் கோலி விளையாடுவதை முடிந்தவரை நான் என் குழந்தைகளை பார்க்க வைக்கிறேன். அவர்கள் அதன் மூலம் உத்வேகம் பெற்று அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்”

- Advertisement -

இந்தியாவில் கடைசியாக நாங்களே வென்றோம்

மேலும் இயான் பெல் பேசும் பொழுது “தற்போது உலகின் சிறந்த அணியாக இந்திய அணி இருக்கலாம். அவர்களுக்கு அடுத்து ஆஸ்திரேலியா வருகிறது. இந்திய அணி அடுத்தடுத்து விளையாட இருக்கும் 10 டெஸ்ட் போட்டிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் இதற்காக தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”

இதையும் படிங்க : அஸ்வின் அண்ணா எனக்கு இந்த மாதிரிதான்.. ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ஜடேஜா பும்ரா – கலகலப்பான சம்பவம்

“இந்தியாவின் கடைசியாக வெற்றி பெற்ற அணி நாங்கள் ஆகத்தான் இருக்கிறோம். வெளிப்படையாக அவர்கள் முதலிடத்தை நோக்கி செல்வதற்கான எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்கள். இந்திய அணி தற்பொழுது உள்நாட்டை விட்டு வெளியே வந்து தொடரை வெல்லக்கூடிய அளவில் இருக்கிறது. இதுதான் அவர்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்கு காரணம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -