“ஒரு விஷயத்தில் உண்மை புரிஞ்சது.. தேடிப் பார்த்தப்ப ரோகித்தான் காரணம்னு தெரிஞ்சது!” – ராகுல் டிராவிட் மனம் திறந்த பாராட்டு!

0
6987
Dravid

இந்திய அணி தற்பொழுது நடப்பு உலகக் கோப்பையில் எட்டு லீக் போட்டிகளையும் வென்று அடுத்து கடைசி மற்றும் ஒன்பதாவது லீக் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி வெற்றி பெறுவது குறித்து ரசிகர்கள் மிகவும் இந்த முறை நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதுவரையிலான இந்திய அணியின் செயல்பாடு திறமையின் அடிப்படையிலும் மனரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் அற்புதமாக இருந்து வந்திருக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணியை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் மிகச் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்கள். இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பங்கு மிகப் பெரியது.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பேச்சாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “அவரது கேப்டன்சி நீண்ட காலமாக சிறப்பாக இருந்து வருகிறது. அவர் அணி மற்றும் பயிற்சி ஊழியர்கள் என அனைவரிடமும் மிகுந்த மரியாதையை பெற்ற ஒருவர். அவருடைய இயல்பிலேயே அவர் செயல்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையிலேயே அவர் எல்லாவற்றையும் பெறுவதற்கு தகுதியானவர். அவர் வழியில் மேலும் வெற்றிகள் வரும் என்று நம்புகிறேன்.

ரோஹித் சர்மா நிச்சயமாக ஒரு கேப்டன். அவர் காலத்திற்கு வெளியேயும் அணியை மிக நல்ல முறையில் வழிநடத்தி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில் அவர் எங்களுக்காக கொடுத்த தொடக்கம் மிகச் சிறப்பான ஒன்று. சில ஆட்டங்கள் எங்களுக்கு சிக்கலாக மாறி இருக்கலாம், ஆனால் அவர் ஆட்டத்தை ஓபன் செய்த விதம் எங்களுக்கு எல்லாவற்றையும் எளிமையாக்கியது.

- Advertisement -

இறுதியில் இந்த உண்மை எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் ஒரு பயிற்சி ஊழியர் என்ற முறையில், நாங்கள் திரும்பி சென்று இதை ஆராய்ந்த பொழுது, ரோகித் சர்மா விளையாடும் இன்னிங்ஸ்களின் தாக்கமும் முக்கியத்துவமும் எப்படியானது என்று புரிந்து கொண்டோம். நிச்சயமாக அவருக்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்தவர்களுக்கு எல்லாம் எளிதாக மாறியது!” இன்று பாராட்டி கூறியிருக்கிறார்!