என்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொல்லி இருந்தேன்; என் வேலை இதுதான் – மகேந்திர சிங் தோனி

0
10089
Dhoni

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது!

இந்த வெற்றியின் மூலம் 12 ஆட்டத்தில் 15 புள்ளிகள் உடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றில் வலிமையான வாய்ப்பில் சென்னை இருக்கிறது!

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி “ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பந்து நன்றாக திரும்பியது. எங்களது சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தின் சீமை பயன்படுத்தி நன்றாக பந்தை திருப்புவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். மேலும் வேகம் குறையும் என்று நினைத்தோம்.

இந்த ஆடுகளத்தில் சரியான ஸ்கோர் என்னவென்று தெரியவில்லை. எனவே எங்கள் பந்துவீச்சாளர்கள் நல்ல பந்துகளை வீச வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு பந்துவீச்சிலும் விக்கட்டை தேடக்கூடாது. அப்பொழுதுதான் நீங்கள் நல்ல பந்துகளை வீச ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

166 முதல் 170 ரன்கள் நல்ல ரன்னாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். நல்ல விஷயம் ஜடேஜாவுக்கும் மொயின் அலிக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. போட்டியின் கடைசிக் கட்டத்தை நெருங்க நெருங்க ஒவ்வொருவரும் தங்கள் பெல்டினின் கீழ் சில டெலிவரிகளை வைத்திருப்பது முக்கியம். எங்கள் பேட்டிங்கில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

- Advertisement -

நான் மிச்சல் சான்ட்நரை இந்த ஆட்டத்திற்கு விரும்பி இருக்க முடியும். அவர் பிளாட் விக்கெட்களில் பந்தை சீமில் அடித்து நல்ல வேகத்தில் வீசக்கூடியவர்.

ருத்ராஜ் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் ஸ்கோரை அடிக்க ஆரம்பித்தவுடன் அவர் மிகவும் எபெக்ட் லெஸ் ஆக இருப்பார். அவர் ரொட்டேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி அடையக் கூடியவர். அவருக்கு விளையாட்டு விழிப்புணர்வு உள்ளது. அவர் எதையும் மாற்றி அமைக்க தயாராக இருப்பவர். இப்படியானவர்கள் உங்களுக்கு கிடைப்பது அரிது. விளையாட்டை புரிந்து கொள்ளும் வீரர்கள் உங்கள் அணியில் உங்களுக்கு தேவையானவர்கள்.

சந்திக்கக்கூடிய பந்துகளில் ரன்கள் அடிப்பதுதான் எனது வேலை. என்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கூறி இருந்தேன். இது வேலை செய்கிறது. நான் செய்ய வேண்டியது இதுதான். இந்த பங்களிப்பில் மகிழ்ச்சி அடைகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!