இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் பெய்த கனமழையால் 35 ஓவர்களிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தால் அது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் விதமாக இந்திய அணி வங்கதேசம் அணியோடு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்த நிலையில் 35 ஓவர்களில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை கூறப்படும் நிலையில், மீதம் இருக்கும் இரண்டு நாட்களில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது கடினமாகிவிடும். ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்கள் நிகழாமல் போகலாம்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய அணிக்கு அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரும், அதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது.
இந்திய அணிக்கு மொத்தமாக இன்னும் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியை தவிர எட்டு போட்டிகள் மீதம் உள்ளன. இதில் சொந்த மண்ணில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் மேலும் ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். ஒருவேளை ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் நிலைமைகளை பொறுத்து இறுதிப் போட்டி வாய்ப்பு அமையும்.
இதையும் படிங்க:எதிர்பார்த்த ஆள் ஆகாஷ் தீப்தான்.. பும்ராவுக்கே ஹெல்ப் பண்றாரு.. அவர் பலம் இதுதான் – ஜாகீர் கான் விளக்கம்
மேலும் தென்னாப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் நிலையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக வெளியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும், உள்நாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.எனவே இந்த மூன்று அணிகள் பெற்றுள்ள வெற்றிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.