“இவர்தான் அடுத்த சூரியகுமார்!” – ஏ.பி.டிவில்லியர்ஸ் சுவாரசிய கருத்து!

0
1729
Devilliers

சச்சின் காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட அதிநவீன கிரிக்கெட் காலத்தின் துவக்கமாக தென்னாபிரிக்காவில் பிறந்து வளர்ந்து விளையாடி பின்பு இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய கெவின் பீட்டர்சன் இருந்தார்!

கெவின் பீட்டர்சன் ஆரம்பித்த பாதையில், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய ஏபிடிவில்லியர்ஸ் உச்சத்தை தொட்டார். 360 டிகிரியில் மைதானத்தின் எல்லாப் புறங்களிலும் அவர் பந்தை அடித்து நொறுக்க, பந்துவீச்சாளர்களால் அவரை எந்த முறையிலும் தடுக்கவே முடிந்தது கிடையாது.

- Advertisement -

ஏ பி டி வில்லியர்ஸ் போல் இன்னொருவர் வருவது மிகப்பெரிய கடினம் என்று உலகக் கிரிக்கெட்டில் பேச்சிருந்த பொழுது இந்தியாவில் இருந்து சூரியகுமார் வந்து தற்பொழுது 360 டிகிரியில் அட்டகாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் ஏபிடிவில்லியர்ஸ்சை தாண்டி 360 டிகிரியில் அதிரடியில் மிரட்டுகிறார் என்று கூறலாம். டி20 கிரிக்கெட்டில் அவருடைய 180 என்ற ஸ்டைரைரேட் உலகத்தின் எந்த ஒரு பேட்ஸ்மேனும் எட்டாத உயரம்!

இந்த நிலையில் ஏபி.டிவில்லியர்ஸ் மிகவும் ஒரு சுவாரசியமான கருத்தை எழுதி இருக்கிறார். அடுத்த ஏபிடிவில்லியர்ஸ் சூரியகுமார் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அடுத்த சூரியகுமார் இவர்தான் என்று ஒரு இளம் வீரரை அவர் கைகாட்டி இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் டிவால்ட் பிரிவீஸ்தான்!

இது பற்றி ஏபி டி வில்லியர்ஸ் எழுதுகையில் ” சூரியகுமார், பிரிவீஸ் விளையாட்டை அணுகும் விதத்தில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவர்கள் இருவரும் ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதோடு பந்துவீச்சாளர்களை எடுத்ததும் தாக்கத் துவங்குகிறார்கள். பந்துவீச்சாளர்களை அவர்கள் செட்டிலாக விடுவது கிடையாது. பிரீவிஸ் இளமையாக இருக்கிறார். அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்வார். இந்த நிலையில் சூரியகுமார் மிகவும் அனுபவசாலியாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் நீண்ட தூரம் முன்னேறி வந்துள்ளார். இவர்கள் இருவரும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்!

- Advertisement -

சூரியகுமார் மற்றும் பிரிவீஸ் இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஒரே அணியில் இருப்பது குறிப்பிடத் தகுந்த விஷயம். கடந்த முறை பிரவீஸ் மூன்றாம் இடத்தில் களமிறங்க அவரைத் தொடர்ந்து நான்காம் இடத்தில் சூரியகுமார் களம் இறங்கினார். தற்போதைய நிலையில் இவர்கள் இருவருமே தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த பார்மில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து எப்படி விளையாடுவார்கள் என்பதை பார்க்க இப்பொழுது பலர் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது உண்மை!