“அவர் மேல் ரொம்ப மரியாதை இருக்கு”…. “பந்து வீச்சை கிண்டல் செய்தாலும் “….. லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் நச் பேட்டி!

0
2770

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன . முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது நேற்று நடைபெற்ற எளிமினேட்டர் போட்டியில் மும்பை அணி இலக்கணம் வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .

மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது . அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் சிறப்பாக வந்து வீசிய ஆகாஷ் மத்வாள் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

முன்னதாக லக்னோனிக்காக ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் 38 ரண்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தார் . லக்னா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியின் போது இவருக்கும் விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையாக கிளம்பியது . இதனைத் தொடர்ந்து லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் விராட் கோலியின் ரசிகர்கள் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் குறித்து செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார் நவீன் உல் ஹக் . அந்தப் பேட்டியில் கூறியிருக்கும் அவர் ” ஒவ்வொருவரும் தங்களது சொந்த வீரர்களை ஆதரிக்க வேண்டும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் . வீரர் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் தனது அணியின் வீரர்களுக்காக நிற்க வேண்டும் . நான் என் அணிவிரர்களுக்காக மைதானத்தில் அவர்களுடன் துணை நிற்பேன் . எனது அணி வீரர்களிடமிருந்தும் அதையே நானும் எதிர்பார்க்கிறேன் . கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் . அவருக்கு இந்தியாவில் நிறைய மரியாதை இருக்கிறது . இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் நிறைய செய்திருக்கிறார்” என்று கூறினார் ,

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு பயிற்சியாளராகவும் ஒரு ஆலோசகராகவும் ஒரு கிரிக்கெட் ஜாம்பவானாகவும் அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு . அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் . கிரிக்கெட் மற்றும் வாழ்க்கைக்கான பல விஷயங்களை அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த வருடம் எங்களுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது . எங்களால் கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் சிறப்பான கிரிக்கெட்டை எல்லா கட்டத்திலும் வெளிப்படுத்தினோம். நான் சிறப்பாக செயல்பட்டாலும் அணி கோப்பையை வெல்லாதது வருத்தமான ஒன்று” என்று கூறினார் .

இந்தத் தொடரில் லக்னோ அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருக்கிறார் நவீன் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை உரக்க கூறி இவரையும் கௌதம் கம்பீரையும் கிண்டல் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்காக இன்னும் வலிமையோடு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் நவீன் .