பாகிஸ்தான் கிரிக்கெட் தற்பொழுது மிகப் பெரிய சரிவில் இருக்கிறது. உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியையும் தோற்று இழந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கவலை தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி பெரிய நாடுகளுக்கு எதிராக தடுமாறினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் இருந்திருக்கும், ஆனால் புதிய அணியான அமெரிக்காவிடம் டி20 உலக கோப்பையில் தோற்பது, ஆப்கானிஸ்தான் அணி இடம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தோற்பது, சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணியிடம் தோற்பது என மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவுக்கு காரணம்
பாகிஸ்தான் நாட்டிற்கு சிலபல ஆண்டுகளாக பல பெரிய கிரிக்கெட் நாடுகள் சுற்றுப்பயணம் செய்து விளையாடாமல் இருந்து வந்தன. இதன் காரணமாக அந்த நாட்டிற்கு கிரிக்கெட் பொருளாதார இழப்பு நிறைய ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாததால் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு செலவு செய்ய முடியாமல் போனது. தற்பொழுது இது பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட்டில் பெரிய சரிவை உண்டாக்கி இருக்கிறது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மிகவும் சிறிய கிரிக்கெட் நாடுகளிடமும் பெரிய போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது. தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலைமையை பார்க்கும் பொழுது அவர்கள் ஜிம்பாப்வே அணியை போலவே இருக்கிறார்கள். இலங்கை கிரிக்கெட்டில் இருக்கும் அளவுக்கு கூட சிறப்பான வீரர்கள் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.
ஹர்ஷா போக்லே வருத்தம்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “குறைந்த ஓவர் கொண்ட போட்டிகளில் பாகிஸ்தான் அணி மிகவும் சவால் கொடுக்கும் ஆபத்தான அணியாக இருக்கும் என்றும், அதே சமயத்தில் நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் சுமாரான அணியாகவே இருக்கும் என்றும் நான் ஆரம்பத்திலேயே கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் அணி தடவை சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்தது மிகவும் தர்ம சங்கடமானது.
இதையும் படிங்க : 6 பந்தில் 20 ரன்.. உங்க கூட பேட்டிங்ல யார் இருக்கணும்?.. சுரேஷ் ரெய்னா மாஸ் தேர்வு
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எல்லா நேரத்திலும் பெருமைப்பட வேண்டிய வெற்றியாக 2007 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி இருக்கிறது. அப்பொழுது அந்த வெற்றியின் முக்கியமானவர்களாக ஷாஹிப் அல்ஹசன் மற்றும் முஸ்பிக்யூர் ரஹீம் இருவரும் இருந்தார்கள். தற்பொழுது பாகிஸ்தான அணிக்கு எதிராக வெற்றி பெறும் பொழுதும் அவர்கள் இருவரும் களத்தில் இருந்தது என்ன மாதிரியான சிறப்பான நிகழ்வு!” என்று கூறியிருக்கிறார்.