தோனி கிடையாது.. விராட் கோலி பற்ற வைத்த அந்த நெருப்புதான்.. காபாவில் கில் ரிஷப் சாதிக்க காரணம் – ஹர்பஜன் சிங் பேட்டி

0
111
Virat

இந்திய அணி விராட் கோலியின் தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் கூட விராட் கோலி சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு விராட் கோலி மூன்று வடிவ இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார். இதைத்தொடர்ந்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை.

- Advertisement -

டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்பக் கூடியவர். அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதும் வீரர்களின் உடல் தகுதிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும் அணியில் ஐந்து முழு நேர பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றார்கள். மேலும் எப்பொழுதும் வெற்றி நோக்கி மட்டுமே விளையாடும்குணத்தை வீரர்களிடம் வளர்த்தார்.

இத்தோடு விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதன் காரணமாகவே இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியை மட்டும் இல்லாமல் தொடரையும் வெல்லும் அளவுக்கு மாறியது. எனவே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக விராட் கோலியே முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி பற்ற வைத்த நெருப்பு

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “விராட் கோலியின் தலைமையின் கீழ் நாம் உலகக் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இந்த ஒரு விஷயம் அவரை சாதாரண கேப்டனாகவோ அல்லது சாதாரண வீரராகவோ மாற்றி விடாது”

“ஒரு டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் 400 ரன்கள் துரத்துவதற்கு அவர் கேப்டனாக இருந்த பொழுது யாரும் பயப்படவில்லை. அதை இந்திய அணி இப்பொழுதும் அதே மனநிலையில் துரத்த விரும்புகிறது. இதற்கு காரணம் விராட் கோலி வெற்றிக்காக விளையாட பற்ற வைத்த நெருப்பு தான் தற்பொழுதும் தொடர்கிறது”

இதையும் படிங்க : இன்னும் 5 விக்கெட்.. பங்களாதேஷ் டி20 தொடரில்.. ஹர்திக் பாண்டியா 2 ஸ்பெஷல் சாதனைகள் படைக்க வாய்ப்பு

“ஆஸ்திரேலியாவில் சிறப்பு வாய்ந்த காபா டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தைரியமாக நின்று காட்டிய மன உறுதி, எப்பொழுதும் போராட வேண்டும் என விராட் கோலி அணியின் சிந்தனையை மாற்றியதுதான் காரணம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -