நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சிளாக தென் ஆப்பிரிக்காவில் கேரி கிரிஸ்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்று உடன் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. தற்பொழுது ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேரி கேரி கிரிஸ்டனை இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக வருமாறு அழைத்திருக்கிறார்.
கேரி கிரிஸ்டன் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர். தற்பொழுது அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு பலரை பயிற்சியாளராக அணுகி வந்தது. ஷேன் வாட்சன் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குப் பயிற்சியாளராக வருவதிலிருந்து விலகினார். கடைசி நேரத்தில் கேரி கிரிஸ்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்தப் பொறுப்புக்கு நியமித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமான முறையில் விளையாடி டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று உடன் வெளியேறியிருக்கிறது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்களிடையே மோசமான அணுகுமுறை இருப்பதாக கேரி கிரிஸ்டன் பேசி இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பரீத் கான் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கேரி கிரிஸ்டன் பேசியதாக பரீத் கான் வெளியிட்ட பதிவில் “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு அணி கிடையாது. அவர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் இடது வலதாக பிரிந்து இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் டீம்ல இருக்கவே பிளேயர்கள் அழறாங்க.. கேரி கிரிஸ்டின் இதத்தான் தேடுவாரு – மைக்கேல் வாகன் பேச்சு
தற்பொழுது இந்த பதிவுக்கு பதில் அளித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் “கேரி நீங்கள் அங்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டும். கேரி அரிதானவர்களில் ஒருவர். 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்றவர்” என்று கூறியிருக்கிறார்.