இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
மேலும் இக்கட்டான சமயத்தில் இந்திய அணியை காப்பாற்றிய இந்த புதிய விதி அதுவே நாளை அவர்களுக்கு பிரச்சனையாகவும் மாற வாய்ப்புண்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எதற்காக இதை செய்தது என்று புரியவில்லை என ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.
நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் பேட்டிங் தொடங்கிய அமெரிக்க அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே குவித்தது. அமெரிக்க அணி தரப்பில் என் ஆர் குமார் அதிகபட்சமாக 27 ரன்கள் அடித்தார்.
இதை அடுத்து இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க விக்கெட்டுகள் மிக விரைவிலேயே இழந்தாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம்தூபெ ஜோடி இந்திய அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. இருப்பினும் இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தபோது களத்தில் இருந்த ஆன் ஃபீல்டு நடுவர் திடீரென அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்ட்டியை வழங்கினார்.
காரணம் அமெரிக்க அணியின் கேப்டன் ஜோன்ஸ் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மூன்று ஓவர்களை வீசி முடிக்காததன் காரணமாக, இரண்டு முறை எச்சரித்தும் மூன்றாவது முறையும் இதே தவறை செய்ததால் அமெரிக்க அணிக்கு பெனால்டியாக 5 ரன்கள் வழங்கப்பட்டது. இதனால் 15 ஓவர்களில் 76 ரன்கள் இருந்த இந்திய அணி 81 ரன்கள் ஆக உயர்த்தப்பட்டு அந்த ஒரு தருணத்தில் ஆட்டம் இந்தியாவின் பக்கம் வந்தது. இதனால் சிரமமே இல்லாமல் இந்திய அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. தற்போது இந்த விதியை இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விளாசியுள்ளார்.
இந்தியாவுக்கு சாதகமாக அமைந்த இந்த புதிய விதி நாளை பிரச்சினையாகவும் மாறலாம் என்று ஹர்பஜன்சிங் கூறி இருக்கிறார். இது குறித்து அவர்
“இந்திய அணிக்கு எதற்காக ஐந்து ரன்கள் வழங்கப்பட்டது என்று எனக்கு புரியவில்லை. இந்த விதியால் அவர்களுக்கு இப்போட்டி சாதகமாக அமைந்தது. ஆனால் வரும் ஆட்டங்களில் அதுவே இந்திய அணிக்கு எதிராகவும் அமையக்கூடும். ஐசிசி அப்போது புதிய புதிய விதிகளை அறிமுகப்படுத்துகிறது. ஆனால் யாருக்கும் அந்த விதியை பற்றிய முழுமையான புரிந்துணர்வு இல்லை.
இதையும் படிங்க:உண்மை என்னனா முன்ன மகிழ்ச்சியா இல்ல.. காரணம் அது நடந்தது.. என்னோட திட்டம் இதுதான் – அர்ஸ்தீப் சிங் பேட்டி
விளையாட்டின் ஓட்டத்தை கட்டுப்படுத்த வேறு வழிகள் இருக்கின்றன. ஒரு இன்னிங்ஸ்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடிப்படையில்தான் அதை கணக்கில் எடுக்கப்பட்டு முழு ஓவர்கள் வீசப்படும். ஆனால் தற்போது ஒரு ஓவர் வீசுவதற்கே கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இது வீரர்களிடையே அழுத்தத்தையே அதிகரிக்கக்கூடும். எனக்கு இது புரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.