குஜராத்தைச் சேர்ந்த துரோணா தேசாய் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி கிரிக்கெட்டில் 498 ரன்கள் குறித்து சாதனை படைத்திருக்கிறார். இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையே ஆன கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட பெரிய ரன்கள் பட்டியலில் நுழைத்திருக்கிறார்.
ஜே.எல் ஆங்கிலப் பள்ளிக்கு எதிராக செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்காக விளையாடிய துரோணா தேசாய் 498 ரன்கள் தனியாக குவிக்க, அவருடைய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. மேலும் அவருடைய எதிர்கால கிரிக்கெட்டுக்கு சிறப்பான விசிட்டிங் கார்டாக இந்த இன்னிங்ஸ் அமைந்திருக்கிறது.
யார் இந்த துரோணா தேசாய்?
குஜராத்தைச் சேர்ந்த இவர் 7 வயதாக இருக்கும் பொழுதே கிரிக்கெட் பயிற்சிக்குள் வந்துவிட்டார். இவருடைய ஐடியல் வீரராக சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். மேலும் குஜராத்தில் 40க்கும் மேற்பட்ட பெரிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய பிரபலமான பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷ் பட்டேல் இடம் பயிற்சி பெற்று வருகிறார்.
இவருடைய சிறப்பான பேட்டிங் திறமை காரணமாக இவருக்கு குஜராத் மாநில 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் இடம் கிடைத்தது. தற்போது இவர் குஜராத் மாநில 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் இடம் பிடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார். தற்பொழுது பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் 498 ரன்கள் குவித்தது இவருக்கு அடுத்த வாய்ப்பை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஸ்கோர் போர்டு இல்லாததால் தெரியவில்லை
இந்தப் போட்டியில் துரோணா தேசாய் 320 பந்துகளை எதிர் கொண்டு 86 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 498 ரன்கள் குவித்தார். இந்தியாவில் இந்த வகையில் பள்ளிகளுக்கு இடையான போட்டியில் மிக அதிகபட்சமாக மும்பையின் பிரணவ் தனவாடே 1008, பிரிதிவி ஷா 546, மற்றும் ஹவேவாலா 515, சமன்லால் 506 மற்றும் அர்மன் ஜாபர் 498 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் தற்போது துரோணா தேசாய் சேர்ந்திருக்கிறார்.
இந்த போட்டி குறித்து அவர் பேசும் பொழுது “நான் 500 ரன்களுக்கு அருகில் இருந்தேன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் போட்டியில் ஸ்கோர் போர்டு எதுவும் கிடையாது. நான் எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறேன் என்பது குறித்து எனது அணி எனக்கு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக நான் அடித்து விளையாட சென்று ஆட்டம் இழந்து விட்டேன். ஆனாலும் நான் அதிக ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சி”
இதையும் படிங்க: ஸ்மித் இந்திய அணிக்கு எதிரா இதை செய்வீங்களா?.. நேரா கேட்டேன்.. நடந்தா சந்தோசம் – தீப் தாஸ்குப்தா பேட்டி
“எனக்கு ஒரு நல்ல கிரிக்கெட்டர் ஆகும் திறமை இருப்பதாக என்னுடைய தந்தை நம்பினார. அவர் என்னை ஜெயப்பிரகாஷ் பட்டேல் சாரிடம் சேர்த்து விட்டார். அப்போது இருந்து எனக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கை. நான் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையில் தற்போது தேர்வுஎழுதுவதற்காக மட்டுமே பள்ளிக்கு சென்று வருகிறேன். மற்ற நேரமெல்லாம் முழுவதுமாக நான் கிரிக்கெட்டில்தான் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.