“கில் சின்னப் பையன் பரவாயில்லை; புஜாரா மோசம்” – விளாசித் தள்ளிய ரவி சாஸ்திரி!

0
1131
Ravi

நேற்று இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் அனாயசமாகச் சரித்து விட்டார்கள்!

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 162 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 123 ரன்கள் எடுக்க, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

- Advertisement -

தனது முதல் இன்னிங்சை இந்திய அணி ஆரம்பித்த பொழுது நம்பிக்கை உடன் நல்ல முறையில் விளையாடுவதாகவே தெரிந்தது. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறியதும் நிலைமைகள் மாறியது.

இதற்கு அடுத்து ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை விட நினைத்து பரிதாபமாக ஸ்டெம்பை பறிகொடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்து 13 ரன்களுக்கு வெளியேறினார்.

கில் வெளியேறிய அதே முறையில் புஜாராவும் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது குறித்து ரவி சாஸ்திரி தனது கருத்தை மிகவும் காட்டமாக பதிவு செய்து இருக்கிறார். தற்பொழுது இந்திய அணி 38 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் ரகானே மற்றும் கே எஸ் பரத் இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி
“முன்கால் பந்தை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் அது குறுக்கே சென்று விட்டதால் நிலைமை மோசமாகிவிட்டது. முதலில் புஜாரா அந்த பந்தை விளையாடலாமா என்று நினைத்தார். பின்னர் அதை விட்டு விடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அப்பொழுது ஆப் ஸ்டெம்ப் வெளியில் தெரிந்தது. அவரது கணிப்பு மிகத் தவறாக இருந்தது.

நாங்கள் இங்கிலாந்தில் பந்தை விட்டு விளையாடுவது பற்றி நிறைய பேசுகிறோம். உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் பேசுகிறோம். ஆனால் இவர்களுக்கு ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

சுப்மன் கில் புட் வொர்க்கில் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறார். அவர் இளமையாக இருக்கிறார் இன்னும் கற்றுக் கொள்வார். ஆனால் புஜாரா மிகவும் ஏமாற்றம் அடைவார்.

அவருடைய முன்கால் பந்துக்கும் பந்தை தாண்டியும் சென்றிருக்க வேண்டும். அதனால்தான் உங்கள் ஆப் ஸ்டெம்ப் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார.