லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றவுடன் ஆக்ரோசத்துடன் துள்ளிக் குறித்து கொண்டாடிய கம்பீரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் ரசிகர்கள் முன் சென்று செய்த செயல்களும் வைரலாகி வருகிறது.
ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பல்வேறு பரபரப்புகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும் சில சங்கடங்களும் நிறைந்ததாக இருந்தது.
விராட் கோலி, டு பிளசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் இலக்கை எட்டுவதற்கு துரத்திய லக்னோ அணிக்கு அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் பறிபோயின.
உள்ளே வந்த ஸ்டாய்னிஸ்(65) மற்றும் நிக்கோலஸ் பூரன்(62) இருவரும் அபாரமாக ரன்குவித்து ஆட்டத்தை மொத்தமாக லக்னோ அணியின் பக்கம் திருப்பினர். பின்னர் பந்துவீச்சில் சுதாரித்த ஆர்சிபி, போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்றது.
கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டபோது, ஐந்து பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் நான்கு ரன்கள் மட்டுமே அடித்து சமன் செய்தபோது ஆட்டத்தில் மேலும் பரபரப்பை கூடியது.
கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது, ஆவேஷ் கான் பந்தை எதிர்கொண்டார். அவரால் அடிக்கமுடியவில்லை. பந்து கீப்பர் வசம் சென்றபோது, தினேஷ் கார்த்திக் தட்டுத்தடுமாறி பிடித்து தூக்கி எறிவதற்குமுன் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் ஒரு ரன் ஓடிவிட்டனர்.
வெற்றிபெற்றபின் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து கொண்டாடினார். கம்பீர் இன்னும் ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஒருபடி மேலே சென்று, ரசிகர்களிடம் சென்று வாயை மூடும்படி செய்தது முகம்சுழிக்க வைக்கும்படி இருந்தது.
இதற்கு கம்பீர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கம்பீர் செய்த செயலின் வீடியோவை கீழே காணலாம்.
Reaction of Gautam Gambhir.. #LucknowSuperGiants won by 1 wicket#TATAIPL2023 #LucknowSuperGiants #LSGvsRCB #GautamGambhir #GazabAndaz pic.twitter.com/1SOJWQyJT0
— Sports Junction (@sportsjunctlive) April 10, 2023
Gautam Gambhir Showing Levels to RCB Fans 🔥🔥#GautamGambhir #RCBvLSG pic.twitter.com/eFrebpJgV0
— Harshit 2.0 🇮🇳 (@Unbreakable_264) April 11, 2023