கேகேஆர் டீமுக்கு ஒரு சத்தியம் பண்றேன்.. நான் போறப்ப.. கம்பீர் தந்த அதிரடி உறுதிமொழி

0
175
Gambhir

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக இருப்பது, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உரிமையாளராக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். இந்த அணிக்கு என்று எப்பொழுதும் அதிரடியாக போட்டியை அணுகும் கலாச்சாரம் இருந்து வருகிறது. அவர்கள் ஏலத்தில் வாங்கும் வீரர்களும் அப்படியே இருப்பார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும், 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்று இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

கவுதம் கம்பீர் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட்டு வெளியேறிய பிறகு, அந்த அணியின் செயல்பாடு மிகவும் சுமாராக மாறியது. மேலும் ஏலத்தில் இருந்தும் சிறந்த வீரர்கள் அணிக்குள் பெரிதாக வரவில்லை. இதன் காரணமாக அவர்களுடைய ஐபிஎல் கோப்பை கனவு மிக தூரமாக சென்றது.

இந்த நிலையில் கம்பீர் லக்னோ அணியின் மென்டர் பதவியில் இருந்து விலகியதோடு மட்டும் இல்லாமல், அரசியலில் இருந்தும் முழுதாக விலகி, தற்பொழுது தன்னுடைய பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராகி இருக்கிறார். இவர் அணிக்குள் வந்த முதல் வருடமே மினி ஏலத்தில் மிட்சல் ஸ்டார்க்குக்கு ஐபிஎல் வரலாறு காணாத விலையான 24.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். மொத்தமாக கொல்கத்தா அணி தற்பொழுது வலிமையாக காணப்படுகிறது.

கவுதம் கம்பீரின் உறுதிமொழி

இந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் விதத்திலும், தனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்த அணி உரிமையாளர் ஷாருக்கான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கவுதம் கம்பீர் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் கூறும்பொழுது “நான் கேகேஆர் அணியை விட்டு விலகும் போது, இந்த அணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்கின்ற உறுதிமொழியை உங்களுக்கு கூறுகிறேன். மேலும் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைக்கவில்லை கொல்கத்தா அணிதான் என்னை வெற்றி பெற வைத்தது.

இதையும் படிங்க : கோலியுடன் என்னை கம்பேர் பண்ணாதிங்க.. கோப்பையை வென்ற பின் ஸ்மிருதி மந்தனா பேட்டி

நான் கையாளுவதற்கு மிகவும் கடினமான நபர். இத்தனை வருடங்களாக என்னுடைய கோபத்தை தாங்கியதற்கு ஷாருக்கான் மற்றும் வெங்கி மைசூருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்குள் வந்த பொழுது ஷாருக்கான் என்னிடம் ‘இது உங்கள் அணி நீங்கள் உருவாக்குங்கள் இல்லை உடையுங்கள்’ என்று சொன்னார். இப்போது நான் வந்திருக்கும் பொழுதும் அதையே தான் சொன்னார்” என்று கூறியிருக்கிறார்.