ஆப்கான் வெற்றி.. இந்திய அணிக்கு ஏற்பட்ட சிக்கல்.. அரையிறுதிக்கு செல்ல என்ன நடக்கக்கூடாது?.. முழு அலசல்

0
553
T20iwc2024

இன்று டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியை வென்றதால் இந்திய அணிக் அரையிறுதிக்குச் செல்வதிலும் கொஞ்சம் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை விட்டு வெளியேறவும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சூப்பர் எட்டு சுற்றில் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் என நான்கு அணிகள் இடம் பிடித்திருக்கின்றன. குறைந்தபட்சம் இரண்டு போட்டிகள் வென்றால் 90% அரையிறுதிக்கான வாய்ப்பு உறுதியாகும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான அணி வீழ்த்தியதால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கும் சில அச்சுறுத்தல்கள் எழுந்திருக்கிறது.

இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தால் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் இரண்டும் நேரடியாக அரை இறுதி சுற்று தகுதி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று இருக்கின்ற காரணத்தினால், நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தாலும் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையக் கூடாது. இதேபோல் 36 பந்துகள் மீதம் இருக்கும் நிலையிலும் தோல்வியடைய கூடாது.

இதையும் படிங்க : பங்களாதேஷ் டீம்க்கு இவ்வளவு ஹைப் தேவையே இல்லை.. என்னோட நாளை கெடுத்துருச்சு – சேவாக் விமர்சனம்

இந்திய அணிக்கு இந்த இரண்டில் ஒரு வகையில் தோல்வி வரும் பொழுது, அந்தப் பக்கத்தில் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில், பங்களாதேஷ் அணியை ஆப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டும் அரை இறுதிக்கு தகுதி பெறும், இந்திய அணி வெளியேறிவிடும். எனவே இந்திய அணி இரண்டு போட்டிகளை வென்று இருந்தாலும் கூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது!

- Advertisement -