கோலியை வச்சு இந்த தப்ப பண்ணாதீங்க.. ஏன்னா இந்த 3 பேரால எல்லா காலத்திலும் சிறந்தவர்களா இருக்க முடியும்- ஆம்ப்ரோஸ் பேட்டி

0
766

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் சர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் விராட் கோலியை இவர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும், ஆனால் இந்த வீரர்களால் எந்த காலகட்டத்திலும் அதிகம் செலுத்தக்கூடிய வீரர்களாக இருக்க முடியும் என்றும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் விராட் கோலி, சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது 50 வது சதத்தை பூர்த்தி செய்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார். இன்னும் சில வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி இன்னமும் பல சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் அவ்வப்போது விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை ஒப்பிட்டு வருகின்றனர். தற்போதுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி சிறந்தவர் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் விராட் கோலியே தன்னை சச்சினோடு ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் ஒரு ஜாம்பவான் பிளேயர் என்றும் வெளிப்படையாகவே தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான ஆம்ப்ரோஸ் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை ஒப்பிட வேண்டாம் எனவும், இது சரியான ஒப்பீடு கிடையாது என்றும் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது ” விராட் கோலி ஒரு சிறந்த மனிதர். நான் போற்றக்கூடிய வீரர்களில் ஒருவர் அவரை பார்ப்பது எனது எப்போதும் பிடிக்கும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை ஒப்பீடு செய்யும் படி என்னிடம் கேட்காதீர்கள்.விராட் கோலி சிறந்த வீரர் தான், ஆனால் மக்கள் இவர்கள் இருவரையும் வித்தியாசமான காலகட்டங்களில் ஒப்பிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இதனால் இந்த விஷயங்களை செய்ய நான் விரும்பவில்லை.

ஆனால் நான் சிறந்த பேட்ஸ்மேன்களை பார்க்கும்போது அவர்களை எப்படி ஒப்பிடுவேன் என்று என்னால் சொல்ல முடியும். விராட் கோலி இன்றைய நவீன கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார் ஆனால் என்னுள் கேட்கப்படும் கேள்வி விராட் கோலி என்னுடைய காலகட்டத்திலோ அல்லது எனக்கு முந்தைய காலகட்டத்தில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியுமா? என்பது தான். ஆனால் அவரால் எந்த காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருக்க முடியும். சச்சின் டெண்டுல்கரும் இதே போல தான்.

இதையும் படிங்க:6,6,6,6,6.. 9 ஓவரில் மேட்சை முடித்த பட்லர்.. இங்கிலாந்து செமி பைனலுக்கு தகுதி.. வெ.இ தெ.ஆ யாருக்கு அரையிறுதி வாய்ப்பு?

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரிக்கி பாண்டிங் இவர்கள் மூவரும் எந்த காலகட்டத்திலும் சிறந்து விளங்கக்கூடிய வீரர்கள்” என்று ஆம்ப்ரோஸ் கூறியிருக்கிறார். ஆனால் தற்போது டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் சற்று கவலையளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் இன்றைய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தனது பழைய பேட்டிங் ஃபார்மை மீட்டு எடுப்பார் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.

- Advertisement -