பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோகைல் கான் இந்திய அணியில் விராட் கோலியை விட ரோகித் சர்மாதான் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறி இருக்கிறார்.
தற்போதைய நவீன கிரிக்கெட் காலத்தில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக உலகக் கிரிக்கெட்டில் இருந்து வருகிறார்கள். பல முன்னாள் வீரர்களின் கணிப்பில் ரோகித் சர்மாவை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மாவின் புகழ் பெற்ற டைமிங்
ரோகித் சர்மாவின் பேட்டிங்கை லேசி எலிகன்ஸ் என கிரிக்கெட் வல்லுனர்கள் வர்ணிப்பார்கள். அவர் பந்தை அவ்வளவு அழகாக டைப் செய்து மிக தாமதமாக விளையாடுவார். அதே சமயத்தில் காலை பின்னே எடுக்காமல் முன் காலிலேயே ஷார்ட் பந்தை புல் ஷாட் விளையாடுவார்.
கிரிக்கெட் உலகில் ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடும் பொழுது அவருடைய பேட்டிங்கில் அழகியல் இருக்காது. அதிரடியாகவும் அதே சமயத்தில் பார்ப்பதற்கு அழகாகவும் தெரியக்கூடிய பேட்டிங்கை கொண்ட பேட்ஸ்மேன் ஆக ரோகித் சர்மா இருக்கிறார். விராட் கோலியை ரோகித் சர்மாவிடம் இருக்கும் பேட்டிங் டைம் உலகத்தில் யாருக்கும் கிடையாது என்று கூறுவார்.
உலகில் ஒருவர்தான் அது ரோகித் சர்மா
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகைல் கான் கூறும் பொழுது “நான் விராட் கோலியை பெரிதும் மதிக்கிறேன். ஏனென்றால் அவர் மிகப்பெரிய பேட்ஸ்மேன். ஆனால் நான் ஒரு பந்துவீச்சாளராக இருந்து பார்க்கும் பொழுது விராட் கோலியை விட ரோகித் சர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். ஏனென்றால் உலகில் யாரையும் விட சிறந்த டைமிங் கொண்டவராக பந்தை மிகத் தாமதமாக விளையாட கூடியவராக இருக்கிறார்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்த 2 இந்திய ஸ்டார் வீரர்கள் வேண்டாம்.. இதான் பிளேயிங் XI – ஆஸி பிராட் ஹாக் பேட்டி
விராட் கோலி தன்னுடைய உடல் தகுதியை பயன்படுத்தி விளையாட கூடியவர். அவர் ஒரு உடன் எடுத்தால் அடுத்து மீண்டும் ஒரு உடன் எடுப்பதற்கு தயாராக இருப்பவர். ஆனால் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தால், மீண்டும் ஒரு ரன் எடுக்க நினைக்க மாட்டார். அடுத்து அவர் பந்து அடித்து ரன்கள் எடுக்க நினைப்பார். ஆனால் விராட் கோலி விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடி ரன்களை எடுக்க கூடியவர். இவர்களுடைய பேட்டிங் ஸ்டைல் இப்படிப்பட்டது” என்று கூறி இருக்கிறார்.