இந்திய அணிதான் கெத்து.. அஸ்வின் ஜடேஜாவை பார்த்து நம்ம பாகிஸ்தான் வீரர்கள் இத கத்துக்கணும் – ரமிஷ் ராஜா கருத்து

0
1555
Ramiz

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டில் வெல்வது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது என பாகிஸ்தான் முன்னாள் வீரரும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான ரமிஷ் ராஜா கூறியிருக்கிறார்.

தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வொகித் சர்மா தலைமையில் அதிரடியாக உள்நாட்டில் வென்றது. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை வென்ற விதம் பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

18 டெஸ்ட் தொடர்களும் 4000 நாட்களும்

இந்திய அணி தொடர்ச்சியாக உள்நாட்டில் 18 டெஸ்ட் தொடர்களை வென்று வந்திருக்கிறது. இதன் மூலம் உள்நாட்டில் டெஸ்ட் தொடர்களில் நான்காயிரம் நாட்களுக்கும் மேல் தோல்வியடையாமல் இருக்கும் ஒரே அணியாக சாதனை படைத்திருக்கிறது. தற்சமயத்தில் 1300 நாட்கள் உடன் உள்நாட்டில் தோல்வி அடையாத அணியாக தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த புள்ளி விவரத்தை பார்த்தால் இந்திய அணியை உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்வது எவ்வளவு கடினமான விஷயம் என்பது புரியும். மேலும் ஆஸ்திரேலியா வீரர்களே இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது உலகக் கோப்பையை வெல்வதை விட கடினமும் மதிப்பும் வாய்ந்தது என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியே சிறந்தது

இந்திய அணி குறித்து ரமிஷ் ராஜா கூறும் பொழுது “இந்த நேரத்தில் சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடிப்பது உலகில் மிகவும் கடினமான ஒரு வேலை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.மேலும் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய டெஸ்ட் அணியை சிறப்பாக கூடிய விஷயம் என்னவென்றால் அவர்கள் வெளிநாட்டில் டெஸ்ட் போட்டிகளை வெல்கிறார்கள். அவர்கள் போட்டியளிக்க கூடியவர்களாக இல்லாமல் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பதுதான், அவர்களை ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற்றுகிறது”

இதையும் படிங்க : பல கஷ்டப்பட்ட சர்பராஸ் கான் அந்த மாதிரி இருக்கிறது.. இந்தியாவுக்குதான் பெரிய அதிர்ஷ்டம் – முகமது கைஃப் பேட்டி

“அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் கிரிக்கெட்டில் எப்படி வளர்ப்பார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் எப்படி உருவாகி வந்து பிறகு எப்படி வேகமாக சரிகிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் வீரர்கள் எப்பொழுதும் கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பிறகு அவர்கள் தொடர்ந்து அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக மாறுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -