எங்க ஆஸி டீமை எங்க இடத்துல வீழ்த்த.. இந்த 2 இந்திய வீரர்களே போதும்.. முடிச்சிடுவாங்க – இயான் சேப்பல் கருத்து

0
1123
Ian

இந்திய அணி இந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டும் என்றால் குறிப்பிட்ட இரண்டு இந்திய வீரர்கள் விளக்கு போன்று இந்திய அணிக்கு செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலியா லெஜன்ட் இயான் சேப்பல் கூறியிருக்கிறார். மேலும் அவர் வேறு இரண்டு இந்திய வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பெர்த் மைதானத்தில் சந்தித்து விளையாடுகிறது. தொடரின் முதல் போட்டியே அதிவேக ஆடுகளம் கொண்ட மைதானத்தில் நடப்பதால் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் திட்டமிடல்கள்

இரண்டு முறை தங்களது சொந்த நாட்டில் வைத்து இந்திய அணியிடம் இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்து இருப்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவமானமாகவே கருதும். இதன் காரணமாக அட்டவணையில் சில முக்கியமான திட்டமிடல்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் செய்திருக்கிறது.

முதல் போட்டியில் அதிவேக பெர்த் மைதானத்தின் ஆடுகளத்தில் நடக்கிறது. இரண்டாவது போட்டியில் பகல் இரவு போட்டியாக நடைபெற இருக்கிறது. தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அதிகம் செலுத்துவதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் அதற்கு ஏற்ற வகையில் டெஸ்ட் தொடர்களை அமைத்து முன்கூட்டியே போட்டி பயிற்சியில் இறங்கி இருக்கிறது.

- Advertisement -

இவர்கள் இருவரும் விளக்கு மாதிரி இருக்க வேண்டும்

இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா லெஜெண்ட் இயான் சேப்பல் கூறும்பொழுது “இந்திய இளம் பேட்ஸ்மேன்களில் ஜெய்ஸ்வால் மிகவும் திறமையானவராக தெரிகிறார். ஆனால் அவர் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடி காட்ட வேண்டும். மேலும் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு விளக்கு போல இருந்து வழிகாட்டியாக செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க :

“இந்தியா கடந்த இரண்டு முறையாக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்தது போல இந்த முறையும் செய்தாக வேண்டும். மேலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் அதே நேரம் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் தனிப்பட்ட முறையில் இருவரும் சிறப்பாக செயல்பட்டாலே இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -