தற்போது பாகிஸ்தான் அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் சா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய ஒரு விஷயம் மிகவும் கவலை அளிப்பதாக கம்ரன் அக்மல் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஆன இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்தில் துவங்குகிறது. இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சி நேஷனல் மைதானத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் நசீம் ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று பேசி இருந்தார். தற்போது அவர் பேசிய இந்த வார்த்தை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் கூறும் பொழுது “நசீம் ஷா பத்திரிகையாளர்களிடம் பேசிய விஷயம் எனக்கு மிகவும் கவலை தருவதாக இருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்று அவர் கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது. அப்போது இதற்கு முன்னால் வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடவில்லையா?. இது போன்ற விஷயங்கள் அணியில் இருக்கும் போதுதான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படியெல்லாம் பேச்சு வருகிறது. அவர் மீடியாவில் சொல்லியதை நாம் பார்க்க வேண்டும்.
கடவுளே இதெல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடக்காமல் இருக்கட்டும். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டை உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வீரர்கள்தான் நமக்கு தேவையானவர்களாக இருக்கிறார்கள். இப்போது நமக்கு தேவை ஒரு நல்ல வெற்றி. நல்ல நோக்கத்துடன் கூடிய ஒரு வெற்றி. இப்போது அதற்கு பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது போல இப்பொழுதும் வெல்ல வேண்டும்.
இதையும் படிங்க : நான் பந்து வீசியதில்.. இந்த தமிழ்நாட்டு பையன் ஸ்பின் ஆடறதுல சிறப்பான பேட்ஸ்மேன் – அஸ்வின் பாராட்டு
எனவே பாகிஸ்தான் அணி பேட்டிங்கை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். ஏனென்றால் சமீப காலத்தில் பாகிஸ்தான் அணி எந்த நல்ல கிரிக்கெட்டையும் விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.