அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருப்பதை ஒட்டி பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் மிக வெளிப்படையாக இந்தியா அணிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் சில வேண்டுகோள்களை வைத்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதை விரும்பவில்லை. அதே சமயத்தில் ஐசிசி தொடர்கள் இந்தியாவில் நடக்கும்போது பாகிஸ்தான் அணி வந்து விளையாடி இருக்கிறது. தற்பொழுது பாகிஸ்தானும் தங்கள் நாட்டிற்கு ஐசிசி தொடருக்கு இந்தியா வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இங்குதான் சிக்கல்கள் ஆரம்பிக்கின்றன.
ஐபிஎல் தொடர் இழப்பு
கிரிக்கெட் உலகில் திறமை வாய்ந்த வீரர்கள் சிறிய நாடுகளில் இருந்தால் கூட அவர்கள் ஐபிஎல் தொடர்களால் பெரிய அளவில் பொருளாதார லாபம் அடைகிறார்கள். உதாரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்தில் இருந்தும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் நல்ல சம்பளத்திற்கு விளையாடுகிறார்கள்.
இப்படியான சிறிய கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு பொருளாதார லாபம் மட்டும் இல்லாமல் நிறைய அனுபவங்களும், பெரிய வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கிறது. இது கிரிக்கெட் சார்ந்து இவர்களின் பார்வையை பெரிதாகுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாக சர்வதேச வீரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
எங்களுக்கு ஐபிஎல் வேண்டாம்
இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதன் சொந்த விதிகள் இருக்கின்றன. இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர் நடக்க ஆரம்பித்தால் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை என்ற விவாதம் முடிவுக்கு வரலாம்”
“மேலும் ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் தொடர் தேவையும் இல்லை. ஏனென்றால் எங்களுக்குச் சொந்தமாக பாகிஸ்தான் பிரிமியர் லீக் இருக்கிறது. வசதியை பொருத்தவரையில் ஐபிஎல் தொடருக்கு சமமாக பிஎஸ்எல் தொடர் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்”
இதையும் படிங்க : கோலி ரோகித் இத செஞ்சிருக்கணும்.. அடுத்து தோனியாவது இத செய்யணும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்
“இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் ரசிகர்களை ஒன்றிணைக்கிறது. இதனால்தான் இது போட்டிகளின் தாய் என்று கூறப்படுகிறது. மேலும் நாங்கள் எங்களுடைய காலத்தில் பலமுறை சுற்றுப்பயணம் செய்து இந்தியாவில் விளையாடியிருக்கிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி இரு நாடுகளுக்கு சென்று விளையாட வேண்டும். அரசியலை ஒதுக்கி விட்டு கிரிக்கெட் நடத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.