கோலி ரோகித் இத செஞ்சிருக்கணும்.. அடுத்து தோனியாவது இத செய்யணும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்

0
41
Raina

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் தோனி மூவரும் செய்ய வேண்டிய சில வேலைகள் குறித்து வெளிப்படையான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய அணி 40 நாளுக்கும் மேலான ஓய்வில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்து செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்தத் தொடர் அக்டோபர் ஒன்றாம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

துலீப் டிராபி 2024

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்ததும், அடுத்த மீண்டும் உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி அடுத்த ஜனவரி மாதம் முறையில் 10 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கும் உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலீப் டிராபியில் இந்திய வீரர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்று விளையாடுகிறார்கள். அதே சமயத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் விளையாடவில்லை. மேலும் அஸ்வின் மற்றும் பும்ராவுக்கு ஓய்வு தானாக கொடுக்கப்பட்டிருக்கிறது. முகமது சமி காயத்தின்காரணமாக பங்கேற்கவில்லை.

- Advertisement -

ரோகித் கோலி இத செஞ்சிருக்கணும்

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “ஐபிஎல் தொடருக்கு பிறகு நாம் எந்த சிவப்பு பந்து தொடரையும் விளையாடவில்லை இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் துலீப் டிராபியில் விளையாடி இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பெரிய தொடருக்கு போகிறீர்கள் என்றால் முன்கூட்டி பயிற்சி உங்களுக்கு தேவை.அதே சமயத்தில் இருவரும் மெச்சூரிட்டியானவர்கள். அவர்களுக்கு என்ன தேவை என்று அவர்களுக்கு தெரியும். குடும்பத்திற்கு நேரம் செலவிடுவது முக்கியம்.

இதையும் படிங்க: நீங்க பந்து வீசிய ரொம்ப கஷ்டமான பேட்ஸ்மேன் யார்.?.. சரியான பதில் தரேன்.. பும்ரா அசத்தல் பேட்டி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி எப்படி விளையாடினார் என்பதை வைத்து அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். மேலும் இன்னும் ஒரு ஆண்டு கூடுதலாக அவர் ருதுராஜ் உடன் இருக்க வேண்டும். மேலும் ருதுராஜ் கேப்டன் பொறுப்பு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே தன்னால் முடிந்த வரையில் சிறப்பாக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -