நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்த பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தற்பொழுது இதுகுறித்து உலகமே பேசுகிறது என்றும் அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
பாபர் அசாம் 2023 ஆம் ஆண்டு முதல் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். கடந்த பத்து டெஸ்ட் இன்னிங்ஸ் களில் ஒருமுறை கூட அவர் அரை சதம் அடிக்கவில்லை. மேலும் கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் அவர் பேட்டிங் செயல்பாடு பாகிஸ்தான் அணியின் வெற்றியை கடுமையாகக் பாதித்திருக்கிறது.
பாபர் அசாமை உலகமே பேசுது
இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “பாபர் அசாம் டக் அவுட் ஆனதும் உலகமே அதைப் பற்றி பேசுகிறது. தற்போது கிரிக்கெட் உலகில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் என இரண்டு பெரிய வீரர்கள் மட்டுமே இப்படியான விமர்சனங்களை சந்திக்கிறார்கள். இவர்கள் இருவரும் சதம் அடிக்கும் பொழுது பெரிய பாராட்டு வருகிறது. ரன் இல்லாமல் ஆட்டம் இழக்கும் பொழுது பெரிய விமர்சனம் வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு இது நடந்தது.
பாபர் அசாம் ஸ்லிப்பில் அவுட் ஆகாமல் இருப்பதற்காக ஆப் ஸ்டெம்பில் நின்று விளையாடுகிறார். அவர் வலை பயிற்சியில் ஷாகின் அப்ரிடியையும் அதேபோல் விளையாடினான். அவர் ஆட்டம் இழந்த பந்தில் லெக் ஸ்டெம்ப் தெரிந்ததை நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் கண்மூடித்தனமாக விளையாட இது டி20 கிரிக்கெட் கிடையாது. ஒரு சேனல் வந்து வீட்டில் தப்பித்து விளையாடி உங்களை நிலை நிறுத்த வேண்டும்.
வலைப் பயிற்சியில் இருக்கும் தவறு
மேலும் ஷான் மசூத் ஆட்டம் இழக்கவில்லை. அவருடைய கால் காப்பில்தான் பந்து பட்டது. பேட்டில் பந்து படவில்லை. ஆனால் அவர் பந்தை தவறவிட்டதும் பின்னால் திரும்பிப் பார்க்கும் முட்டாள்தனமான வேலையை செய்து விட்டார். இதன் காரணமாக மூன்றாவது நடுவருக்கு செல்ல வேண்டிய தேவை வந்துவிட்டது.
இதையும் படிங்க : டி20 WC.. மறக்க ட்ரை பண்றேன் ஆனா முடியல.. தோத்தாலும் இந்த ஒரு விஷயத்துனால ஆறுதலா இருக்கு.. ஸ்டப்ஸ் பேட்டி
நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன் பாகிஸ்தான் பயிற்சி செய்யும் பொழுது வலை பேட்ஸ்மேன்களுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை தவறவிட்டால் தானே எடுத்து பந்துவீச்சாளருக்கு போட வேண்டியது உள்ளது. இதன் காரணத்தால் பேட்ஸ்மேன்கள் எல்லா பந்தையும் விளையாடுகிறார்கள். வலை பின்னால் தூரமாக இருந்தால் பந்தை விட்டு விளையாடும் பழக்கம் வரும்” என்று கூறியிருக்கிறார்.