பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சொந்த நாட்டின் தோல்வி அடைந்தது மிகப்பெரிய விமர்சனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அகமது சேஷாத் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
இன்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷாகின் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டார். அதே சமயத்தில் பாபர் அசாமையும் அணியை விட்டு நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கிறது.
14 இன்னிங்ஸ் பாபர் அசாம்
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது சேஷாத் கூறும் பொழுது “ஜிம்பாப்வே அணியில் ஆரம்பித்து அயர்லாந்து அமெரிக்கா என எல்லா அணிகளிடமும் தோற்றீர்கள். அடுத்து இந்தியாவிடம் தோற்று இங்கே வந்து இப்பொழுது பங்களாதேஷ் அணியிடமும் தோற்று இருக்கிறீர்கள். இந்த தோல்விகளுக்கெல்லாம் ஷாகின் அப்ரிடி மட்டுமே காரணமா?அவர் மட்டுமே கிடையாது. கடைசி 14 இன்னிங்க்ஸ்கலில் பாபர் அசாம் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? இதற்கு எல்லோருமே பொறுப்பு”
“அனைத்து தோல்விகளுக்கும் ஷாகின் அப்ரிடியை மட்டுமே பொறுப்பாக்குவது மிகவும் பெரிய தவறு. அவரது ஆட்டத்தில் அணுகு முறையில் பிரச்சனை இருக்கிறது. எனவே அவரை நீக்கி விட்டீர்கள். சரி பரவாயில்லை ஆனால் மற்றவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? அப்துல்லா ஷபிக் என்ன செய்திருக்கிறார்? 25 இன்னிங்ஸ்களுக்கு பிறகு திரும்ப கொண்டு வந்த சையும் அயூப் என்ன செய்தார்?”
விசாரணை வேண்டும்
“அப்படி மட்டுமே டிராப் செய்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து விட முடியாது. சில கடுமையான நடவடிக்கைகள் தேவை. தோல்விக்கு காரணமான அத்தனை வீரர்களும் விசாரிக்கப்பட வேண்டும். அனைவருமே விசாரிக்கப்பட வேண்டியவர்கள். இங்கு விளையாட்டு மற்றும் நாடு மட்டுமே முன்னணியில் இருக்கும் தனி நபர்கள் யாரும் கிடையாது”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் எங்க ஊர் பவுன்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா?.. சீரிஸ் தலையெழுத்தே இதான் – ஆஸி முன்னாள் கோச் பேட்டி
“இவர்களுக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும், இவர்கள் தங்கள் சாதனைகளுக்கு பின்னால் மறைந்து கொண்டாலும், இதற்காக எவ்வளவு பணம் செலவு செய்தாலும்,நடந்தது எல்லாம் எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தெரியும். நீங்கள் சரியான திசையில் செல்ல விரும்பினால் தோல்வியில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களையும் விசாரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.