ஜெய்ஸ்வால் எங்க ஊர் பவுன்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா?.. சீரிஸ் தலையெழுத்தே இதான் – ஆஸி முன்னாள் கோச் பேட்டி

0
182
Jaiswal

இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் அனுபவமற்ற ஜெய்ஸ்வால் பேட்டிங் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இந்தி அணியின் வெற்றி அமையும் என ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கனன் தெரிவித்திருக்கிறார்.

இந்த முறை இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெரிய பவுன்ஸ் இருக்கக்கூடிய பெர்த் மைதானத்தில் துவங்குவது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியை பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நடக்கிறது. எனவே முதல் இரண்டு போட்டிகளும் மிகக் கடுமையாக இருக்கும்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெய்ஸ்வால்

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் அதிக ரன் அடித்த வீரராக இருக்கிறார். மேலும் கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன் 700க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து இந்திய மண்ணில் தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

அதே சமயத்தில் பவுன்ஸ் கொண்ட தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் அந்த அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். பவுன்ஸ் கொண்ட ஆடுகளத்தில் ஜெய்ஸ்வால் தடுமாற்றம் வெளிப்படையாக தெரிந்தது. தற்பொழுது இது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் எதிரொலிக்குமா? என அஞ்சப்படுகிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால்தான் முக்கிய காரணி

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கனன் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் பற்றிய நிறைய பேச்சுக்கள் இருக்கிறது இல்லையா? அவர் உற்சாகமான வீரர், மேலும் பார்க்கப்பட வேண்டியவர். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடி அது கிடையாது. குறைந்தபட்சம் பெர்த் மைதானத்தில் உள்ள ஆடுகளம் போன்றவற்றில் அவர் ஒரு போட்டியை கூட இதுவரையில் விளையாடி இருக்கவில்லை.

இதையும் படிங்க : எங்களுக்கு இதனால ஐபிஎல் தேவையே கிடையாது.. ஆனாலும் நாங்க பெரிய இடத்துல இல்ல – பாக் கம்ரன் அக்மல் பேட்டி

எனவே இந்த மாற்றங்களுக்கு எப்படி ஜெய்ஸ்வால் தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறார் என்பதை பொறுத்தே, இந்திய அணி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கடந்து செல்லும் என்று நான் நினைக்கிறேன். இதில் ஜெயஸ்வால்தான் முக்கிய காற்று அழுத்தமானியாக இருக்கப் போகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -