பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஒரு சர்க்கஸ்.. அவங்க கோமாளிகள்.. காரணத்தை பாருங்க – பாக் முன்னாள் வீரர் பேட்டி

0
203
Yasir

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யாசிர் அராபத் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சர்க்கஸ் போன்றது எனவும் அதில் உள்ளவர்கள் கோமாளிகள் எனவும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய குழப்ப நிலை காணப்படுகிறது. புதிய பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்கள் என நிறைய மாற்றங்கள் கடந்த வருடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அணி சந்திக்கும் மோசமான தோல்விகள் மட்டும் வெறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கில்லஸ்பி வெளியேறுகிறார் இங்கிலாந்து வருகிறது

பாகிஸ்தான் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்நாட்டில் ஒருநாள் கோப்பை நடைபெற இருக்கிறது. எனவே பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் கில்லஸ்பி மற்றும் உயர் செயல் திறன் நிபுணர் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்கள்.

மீண்டும் அவர்கள் டெஸ்ட் தொடருக்குதான் திரும்புவார்கள். இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்நாட்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்றக் கொண்டு செல்வதற்கான எந்த தெளிவான திட்டங்களும் போடப்படவில்லை. தற்பொழுது இந்த மாதிரியான விஷயங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது கடுமையான விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் ஒரு சர்க்கஸ்

இது குறித்து முன்னாள் வீரர் யாசிர் அரஃபத் கூறும் பொழுது “பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருக்கும் பிரச்சினைகள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. வீரர்களின் உடல் தகுதி, தொழில்நுட்ப சிக்கல்கள், ஆடுகள சிக்கல்கள் என்று நிறைய சிக்கல்கள் வெளியில் தெரிகிறது. இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வர இருக்கும் நிலையில், பாகிஸ்தான் உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுகிறது. இந்த நிலையில் டெஸ்ட் பயிற்சியாளர் கில்லஸ்பி நாடு ஆஸ்திரேலியா திரும்புகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு சர்க்கஸ் அதில் கோமாளிகளும் உள்ளார்கள். இது ஒரு நகைச்சுவை.

இதையும் படிங்க : டிராவிட் சார் ஓகே சொன்னால் ஓகேதான்.. என் வாழ்க்கை மாறியது அந்த ஒரு நிமிடத்தில்தான் – சஞ்சு சாம்சன் பேட்டி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு வீரர்களை அழைத்து வரும் வேலையை செய்கிறீர்கள். பாகிஸ்தான் வீரர்கள் 15 ஆண்டுகளாக முதல் தர கிரிக்கெட்டில் உள்நாட்டில் விளையாடவில்லை என கேப்டன் ஷான் மசூத் கூறுகிறார். அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக பெரிய தொடரும் இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள். இதன் காரணமாகத்தான் உங்கள் அமைப்பு சர்க்கஸ் போலவும் நீங்கள் கோமாளிகள் போலவும் எனக்கு தெரிகிறீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -