ரோகித் சர்மாவுக்கு அடுத்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டுக்கும் சுப்மன் கில் எதிர்காலத்தில் கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்பது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவுக்கு பிறகு யார் கேப்டனாக கொண்டுவரப்படுவார்கள் என்பது குறித்து எந்த விதமான தெளிவும் இன்னும் கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகவும் அமைதியாக இருக்கிறது.
பும்ராவிடம் பறிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக பும்ரா இருந்தார். அவர் இந்திய கேப்டனாக வழிநடத்த மிகவும் விருப்பம் கொண்டவராகவும் இருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது திடீரென பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து பும்ரா நீக்கப்பட்டிருக்கிறார்.
இந்த விஷயத்தில் இன்னொரு திருப்பமாக புதிய துணை கேப்டனாக யாரையும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். தற்பொழுது பும்ராவை நீக்கிவிட்டு உடனடியாக கில்லை துணை கேப்டனாக அறிவித்தால் அதனால் வீரர்களுக்குள் ஏதாவது மனச் சங்கட்டங்கள் உருவாக்கலாம் என பிசிசிஐ யோசிக்கிறது. இதன் காரணமாக அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டார்கள்.
அஜித் அகர்கர் பேச்சு
சுக்மன் கில் குறித்து இந்தியத் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும்பொழுது “சுப்மன் கில் மூன்று வடிவத்திலும் விளையாடக்கூடியவராக நாங்கள் உணர்கிறோம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் நல்ல தாக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவரையே மூன்று வடிவ இந்திய அணிகளுக்கும் கேப்டனாக எதிர்காலத்தில் கொண்டுவர முடிவில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : 19.1 ஓவர்.. மீண்டும் தினேஷ் கார்த்திக் அணி வெற்றி.. முன்னாள் சிஎஸ்கே வீரர் அசத்தல்.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட்
தற்போது இதுகுறித்து டேனிஷ் கனேரியா கூறும் பொழுது “ரோகித் சர்மாவுக்கு பிறகு எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தக் கூடிய வீரராக எனக்கு ரிஷப் பண்ட் தெரிகிறார். கேப்டனாக இந்திய டெஸ்ட் வழிநடத்தக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. மேலும் இந்திய கிரிக்கெட் சிறப்பாக செயல்பட்டும் வருகிறது” என்று கூறியிருக்கிறார்.