ஆஸி இந்த 4 இந்திய வீரர்களுக்கு பயப்படுது.. ரோகித் டீமுக்கு மத்தவங்க குழந்தைங்க – பாக் பசித் அலி பேட்டி

0
36
Basit

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்திய அணியின் குறிப்பிட்ட நான்கு வீரர்களை பார்த்து பயம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர்கள் மைண்ட் கேமில் ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

இந்திய அணி கடந்த இரண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணங்களிலும் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று இருக்கிறது. மேலும் இந்த முறையும் இந்திய அணி எல்லா துறைகளிலும் வலிமையாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை பார்த்து பயப்படுவதாக பசித் அலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலகின் சிறந்த இரண்டு அணிகள்

உலகக் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சிறந்த நிலையில் இருந்தாலும் கூட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்தான் மிகச் சிறந்த சவால்களை கொடுக்கக்கூடிய அணிகளாக உலகக் கிரிக்கெட்டில் இருக்கின்றன. எனவே இந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடர் என்றால் அதற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரையில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு ஆசஸ் தொடர் போல மிகவும் விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை தற்பொழுது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்தியாவின் நான்கு வீரர்கள்

இந்தத் தொடர் குறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ், முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆடம் கில்கிறிஸ்ட் என அனைவருமே மைண்ட் கேம் விளையாடுகிறார்கள். பும்ரா, ஷமி ரோகித் மற்றும் விராட் என நான்கு வீரர்களையும் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள்.

“என் வார்த்தைகளை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த நான்கு வீரர்களுக்கும் ஆஸ்திரேலியர்கள் பயப்படுகிறார்கள். மேலும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பான முறையில் விளையாடிய ரன்கள் குவித்திருக்கிறார். எனவே இதன் காரணமாக அவர்கள் வேறு ஒன்றை காட்டி சிந்தனையை திருப்பி மைண்ட் கேம் விளையாடி வருகிறார்கள்”

இதையும் படிங்க : பும்ரா நீக்கப்பட்ட பின்.. துணை கேப்டனே இல்லாத இந்திய டெஸ்ட் அணி.. காரணம் இதுதான் – அபிஷேக் நாயர் விளக்கம்

“கேப்டனாக ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதம் என்பது தற்போதைக்கு போதாது. அதே சமயத்தில் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடியை சவாலை கொடுக்க கூடிய ஒரே அணியாக ஆஸ்திரேலிய மட்டுமே இருக்கிறது. மற்ற அணிகள் எல்லாம் இந்திய அணிக்கு முன்னால் குழந்தைகள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -