இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று டி20 தொடரில் விளையாடுவதற்கு முன்பாக விளையாட இருக்கும் ஒரு டி20 தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரை குறி வைத்து இந்திய அணி நிர்வாகம் மொத்தத் திட்டங்களையும் தீட்டி வருகிறது.
பங்களாதேஷ் டி20 தொடர்
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பிக்கிறது. இதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் முக்கிய வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்த டி20 தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஏனென்றால் இந்திய அணி அடுத்தடுத்து பெரிய டெஸ்ட் தொடர்களில் விளையாட இருப்பதால் டெஸ்ட் அணியிடம் பெரும் வீரர்களுக்கு சரியான ஓய்வு தேவைப்படுகிறது. இப்படி இருக்கும் பொழுது ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று டி20 தொடரில் விளையாட இருப்பதாக அட்டவணை கூறுகிறது.
தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்
இந்திய அணி நவம்பர் மாதம் ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்கா சென்று டி20 தொடரில் விளையாட இருப்பதாக பிசிசிஐ அட்டவணை தெரிவிக்கிறது. அதே நவம்பர் மாதம் பாதிக்கு மேல் இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இப்படி தொடர் அமைத்து இருப்பது சரியானது கிடையாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “இந்திய அணி நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இப்படி இருக்கும் பொழுது நவம்பர் மாதம் ஆரம்பத்தில் எதற்காக சம்பந்தமே இல்லாமல் தென் ஆப்பிரிக்கா சென்று டி20 தொடரில் விளையாட வேண்டும்?”
இதையும் படிங்க : கில் இல்லை.. ரோகித்துக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு.. இவர்தான் கேப்டனா இருக்கணும் – பாக் டேனிஷ் கனேரியா விருப்பம்
“இந்திய அணி உடன் விளையாடினால் நிறைய காசு கிடைக்கும் என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு பிசிசிஐ இடம் கேட்டிருக்கும் போல. அதனால்தான் இப்படி ஆன தொடர்களை தேவையில்லாமல் நடுவில் நடத்துகிறார்கள். இந்தத் தொடர் தேவையற்றது” என்று கூறியிருக்கிறார்.