போன முறை ஹீரோ.. ஆனா ஸாரி இனிமே அந்த பையன்.. இந்திய அணிக்கு வர வாய்ப்பில்ல – ஆகாஷ் சோப்ரா நேரடி பேச்சு

0
65
Akash

இந்திய அணி அடுத்த வாரத்தில் உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு இனி இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கேஎல்.ராகுல், சர்ப்ராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் மூவரின் இடமும் உறுதி செய்யப்படாமலே இருந்தது. எனவே இவர்களுக்கு குறிப்பிட்ட சில போட்டிகளுக்கு வாய்ப்பு கொடுத்து செயல்படாவிட்டால் மட்டுமே மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

கடைசி பங்களாதேஷ் டெஸ்ட் தொடர்

இறுதியாக இந்திய அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியை மிக எளிதாக வென்றது. அதே சமயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி மிகவும் கடினப்பட்டு தோற்கும் நிலையில் இருந்துதான் வென்றது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணி தோற்கும் வாய்ப்பு அந்த போட்டியில் இருந்தது.

அந்த குறிப்பிட்ட போட்டியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இந்திய அணியை வரலாற்று தோல்வியிலிருந்து காப்பாற்றினார்கள். இப்படியான நிலையில் தான் இந்த முறை இந்தியாவிற்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் விளையாட வரும்பொழுது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் துலீப் டிராபியிலும் அவர் பேட்டி எதிர்பார்த்தபடி அமையவில்லை.

- Advertisement -

தேர்வு செய்யப்பட்ட சிலருக்கே விளையாட வாய்ப்பு இல்லை

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “கடந்த முறை பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சிறப்பாக விளையாடிய காரணத்தினாலே குறிப்பிட்ட அந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணியால் வெல்ல முடிந்தது. இதற்குப் பின்னால் உலகம் நிறைய மாறிவிட்டது. இனி இந்திய டெஸ்ட் அணிக்கு விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க: 101 ஓவர்.. ருதுராஜ் அணிக்கு அபிமன்யு மற்றும் தமிழக வீரர் பதிலடி.. துலீப் டிராபியில் ரன் மழை

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 15 பேர் கொண்ட அணியில் சில வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காது. குறிப்பாக கேஎல்.ராகுல், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இப்படியான நிலை இருக்கும்பொழுது இதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எங்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும்?” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -