இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா ஆரம்ப நாட்களில் கவுதம் கம்பீர் உடன் தனக்கு இருந்த பழக்கம் பற்றி பேசியிருக்கிறார்.
ஆகாஷ் சோப்ரா டெல்லி மாநில அணிக்கு விளையாடி வந்த காலகட்டத்தில் ஷேவாக் மற்றும் கம்பீர் உடன் விளையாடியிருக்கிறார்கள். மேலும் இளம் வீரர்களாக அப்போது இருந்த விராட் கோலி மற்றும் ஷிகர் தவானும் உடன் விளையாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கம்பீர் நண்பர் கிடையாது
கவுதம் கம்பீர் பெரிய வியாபார குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் அவருடைய எண்ணம் வியாபாரத்தில் இல்லாமல் விளையாட்டில் இருந்தது. மேலும் சிறு வயது முதலே எந்த ஒரு விஷயத்தையும் அதிதீவிரமாக செய்யக்கூடியவராகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும் அவர் இருந்து வந்தார். இதை அவரே ஒரு பேட்டியின்போது கூறி இருந்தார்.
தற்பொழுது கம்பீர் உடனான நட்பு பற்றி பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நாங்கள் ஒரு இடத்துக்காக போட்டியிட்டவர்கள் என்பதால் நாங்கள் போட்டியாளர்களாகவே இருந்தோம். நண்பர்களாக இருக்க முடியவில்லை. அப்போது எங்கள் அணி மிகவும் நன்றாக இருந்தது. விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவதற்கு கூட அணியில் இடம் இல்லை. இவர்கள் மூன்றாம் இடத்தில் விளையாட வேண்டும் என்பதற்காக, சேவாக் தன்னை நான்காவது இடத்தில் இறக்கி கொண்டு விளையாடி இருக்கிறார்”
தங்கக் கரண்டியுடன் பிறந்தவர்
மேலும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “உண்மையைச் சொல்வதென்றால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தது கிடையாது போட்டியாளர்களாகவே இருந்திருக்கிறோம். அவர் மிகவும் கடினமான உழைப்பாளி. அவர் எப்பொழுதும் ரன்கள் குவித்துக் கொண்டே இருந்தார். ஆனால் எப்பொழுதும் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும் இருந்தார்”
இதையும் படிங்க : கும்ப்ளே எனக்காக அதை ஆசைப்படறாரு.. ஆனா இந்த இடத்துல கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விடுவேன் – அஸ்வின் பேச்சு
“கம்பீர் மிக நல்ல இதயம் படைத்தவராகவும், பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்தும் வந்தார். அவருக்கு கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்த காரணத்தினால் நாள் முழுவதும் மைதானத்தில் இருந்தார். அவர் வெள்ளி கரண்டியுடன் பிறந்தவர் இல்லை தங்கக் கரண்டியுடன் பிறந்த வசதியானவர். அபிநவ் பிந்த்ரா போல அவர் சரியான இடத்தில் இருந்தார்” என்று கூறி இருக்கிறார்.