விராட் கோலி வேற்று கிரகவாசி.. அவர்கிட்ட இதை மட்டும் செய்யவே கூடாது – இந்திய முன்னாள் பீல்டிங் கோச் பேட்டி

0
75
Virat

இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி காலத்தில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆர்.ஸ்ரீதர் விராட் கோலியை வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர் என்று பெருமையாக கூறியிருக்கிறார். அவருடைய ஆற்றல் அப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது.

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என மூவருடனும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் ஆர் ஸ்ரீதர். இவருக்கு இந்திய அணியில் நடந்த பல முக்கிய விஷயங்களில் நேரடி அனுபவம் இருக்கிறது. எனவே இவருடைய பேட்டிகள் எப்பொழுதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான விஷயங்களை கொண்டு வரும்.

- Advertisement -

வேற்று கிரகவாசி விராட் கோலி

விராட் கோலி குறித்து ஆர்.ஸ்ரீதர் கூறும்பொழுது “விராட் கோலி சமீபத்தில் ஒரு பேட்டியில் கிரிக்கெட்டில் உங்களுடைய பங்கு என்பது ஒரு சிறிய காலம் மட்டுமே. எனவே இந்த சிறிய காலத்தில் உங்களுடைய எல்லாவற்றையும் கொடுக்க முடியாவிட்டால் என்ன பயன்? என்று கேட்டார். இதை எடுத்து யோசிக்க எவ்வளவு இருக்கிறது. இவை அனைவரும் இன்ஸ்பிரேஷன் ஆக துரதிஷ்டவசமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் போல அனைத்தையும் மைதானத்தில் கொடுக்க முடியாது. ஏனென்றால் அவர் ஒரு வேற்று கிரகவாசி.

நான் அணியில் இருக்கும் பொழுது அவரிடம் எப்பொழுதும் விளையாட்டாக நீங்கள் எந்த கிரகத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் அதற்கு எப்பொழுதும் புன்னகையை பதிலாக தந்து கொண்டே இருப்பார். நீங்கள் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர்தானே நீங்கள் பூமியில் இருந்து வரவில்லைதானே என்று கேட்கும் போதெல்லாம் அவருக்கு சிரிப்பு வந்துவிடும்.

- Advertisement -

இதை மட்டும் செய்யக்கூடாது

விராட் கோலியைப் பற்றி நிறைய பேசலாம் அவர் ஒரு ஜாம்பவான், இந்த நவீன கால கிரிக்கெட்டின் உண்மையான ஜாம்பவான். அவர் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடினார், பீல்டிங் செய்தார், அவர் மற்றவர்களை நடத்திய விதம், அவருக்கு விளையாட்டில் இருந்த ஆற்றல் மற்றும் ஆர்வத்தை பார்த்தோம். அவர் தனது சொந்த அணிக்கு கொண்டு வந்த ஆற்றல் நம்ப முடியாத ஒன்று.

இதையும் படிங்க : உண்மை சொன்னா.. கோலியின் ஸ்ட்ரைக் ரேட் ரொம்ப கம்மி ஐபிஎல் 2024 பாதி வரை.. அடுத்தது நம்பவே முடியல – கேமரூன் கிரீன்

அவர் எந்த நேரத்திலும் பெர்ஃபார்மன்ஸ் செய்வார். அவர் சிறப்பானவர் என்பது ஆவணப்படுத்தப்பட்ட ஒரு உண்மை. எல்லா எதிரணிகளுமே தயவுசெய்து அவரை விட்டு விடுங்கள் அவரிடம் போய் எதுவும் பேசி விடாதீர்கள் என்றுதான் சொல்கின்றன. அப்படி நீங்கள் ஏதாவது அவரிடம் வம்பு இழுத்து அவர் ஊக்கம் பெற்று விட்டால், நீங்கள் வாழ்க்கையில் இதுவரை வாங்காத அளவிற்கு அடி வாங்குவீர்கள் என்றுதான் சொல்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -