இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகத்துக்கு முக்கிய அறிவுரை ஒன்றை முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியிருக்கிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பொழுதும் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில் இவரது பங்கு மிகப் பெரியது.
லெக் சைடு திட்டம்
கடைசியாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற பொழுது ரவி சாஸ்திரி லெக் சைடு பந்து வீசும் திட்டத்தை வந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் கூறிவிட்டு அதற்கான திட்டங்களை வகுக்கும்படி கேட்க, பிறகு அந்தத் தொடருக்கு முழுமையாக பந்துவீச்சு திட்டங்களை பரத் அருண் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஆஃப் சைட் ரன்கள் அடிக்காத அளவுக்கு பந்துவீச்சு திட்டம் லெக் சைடுக்கு மாற்றப்பட்டது. இந்திய அணியின் இந்த வியூகத்தை புரிந்து கொள்வதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா அணி தொடர இந்திய அணி இடம் இழந்துவிட்டது. மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத பொழுது சிராஜ், நவ்தீப் ஷைனி, நடராஜன் என புதிய இளம் பந்துவீச்சாளர்களை வைத்து வெற்றி தேடி தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்காவது வேகப்பந்துவீச்சாளர்
இந்த நிலையில் பரத் அருண் பேசும் பொழுது ” தற்பொழுது ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராக, ஐபிஎல் தொடரில் 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்களை கொண்டு வந்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை சரியான முறையில் எக்ஸ்போஸ் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு இது முதல்முறையாக இருக்க வேண்டும். சிவப்பு பதில் செயல்படுவதற்கு இந்த வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.தற்போது இதற்கு நேரம் இருக்கின்ற காரணத்தினால் நாம் இவர்களை நமது பெல்ட்டில் கொண்டு வந்து இவர்களை பயிற்சி கொடுத்து தயார் செய்ய முடியும்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் நீங்க சொல்றத மட்டுமே சரினு பேசாதீங்க.. சாம்பியன்ஸ் டிராபிக்கு ஒரே வழி இதுதான் – ஹர்பஜன் சிங் பேச்சு
இந்தியாவில் முதல் தர கிரிக்கெட்டில் பந்து வீசும் பொழுது வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாத நிலையில் வீசுவோம். எனவே சில தந்திரமான முறைகள் தேவைப்படும். இதன் காரணமாக ரிவர்ஸ் ஸ்விங் செய்வது முக்கியமாகும். இந்த வகையில் சிராஜ் மிகவும் திறமையாக பயிற்சி பெற்றிருந்தார். இதன் காரணமாகத்தான் உலகெங்கும் ரிவர்ஸ் ஸ்விங் சூழ்நிலையில் சிராஜ் மிக ஆபத்தான பவுலராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.