ரோகித் எதை மறந்தாலும் அதை மறக்க மாட்டார்.. அந்த விஷயத்துல அவர மாதிரி பாக்கவே இல்ல – இந்திய முன்னாள் பேட்டிங் கோச் பேட்டி

0
99
Rohit

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் ரோஹித் சர்மா போன்ற ஒரு கேப்டனை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தத் தொடரில் ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அணியை மிகச்சிறந்த முறையில் வழி நடத்தி இருந்தார்.

- Advertisement -

குறிப்பாக ரோகித் சர்மா ஒரு துவக்க வீரர் என்கின்ற காரணத்தினால், தன்னுடைய அணி எப்படி விளையாட வேண்டுமோ அதற்கு ஏற்றபடி அவரே விளையாடி நல்ல உதாரணமாக இருந்தார். மேலும் அணிக்குள் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையும் வீரர்களுக்குள் நல்ல ஒற்றுமையும் காணப்பட்டது.

இந்த நிலையில் ரோகித் சர்மா பற்றி பேசி இருக்கும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “டாஸ் போடும் பொழுது பேட்டிங் செய்ய முடிவு செய்யப்பட்டதா அல்லது பந்து வீச முடிவு செய்யப்பட்டதா? என்பதை அவர் மறந்து விடுவார். அதேபோல அணியின் பேருந்தில் அவருடைய மொபைல் மற்றும் ஐபேட் போன்றவற்றையும் மறந்து விடுவார். அவர் சரியான ஞாபக மறதி கொண்டவர். அப்படியானவர் தன்னுடைய கேம் ப்ளானை மட்டும் எப்பொழுதும் மறக்க மாட்டார்.அவர் அதில் மிகவும் திறமைசாலி மற்றும் சிறந்த தந்திரோபாயவாதி.

- Advertisement -

அவர் எப்பொழுதும் வீரர்களின் கேப்டனாக இருந்தார். மேலும் வீரர்களுடனும், போட்டிக்கான திட்டங்களை தயாரிப்பதிலும் அவர் பெரிய முதலீட்டை செய்தார். போட்டிக்கான திட்டங்களை உருவாக்குவதில் அவர் நீண்ட நேரத்தை செலவு செய்தார். மேலும் பந்து வீச்சாளர்களின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறார். பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுடன் அமர்ந்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று பேசி தெரிந்து கொள்வார். நான் இப்படிப்பட்ட ஒரு கேப்டனை பார்த்தது கிடையாது.

இதையும் படிங்க : நாங்க கண்டிப்பு காட்டினோம்.. ஜடேஜா கிட்ட கட்டாயம் அதை செய்ய சொன்னேன் – ஜெய் ஷா வெளியிட்ட தகவல்

அவர் தந்திரோபயவாதியாக மிகச்சிறந்தவராக இருக்கிறார். டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பும்ராவின் ஓவரின் மிகச் சீக்கிரமாக முடித்து விட்டார். அந்த நேரத்தில் ஆட்ட சூழ்நிலைக்கு அது தான் மிகவும் சரியான ஒன்றாக இருந்தது. அவர் என்ன நினைக்கிறார் அவர் எப்படி கொண்டு செல்கிறார் என்பது நமக்கு சிறிது நேரம் போனப் பிறகே மிகத் தெளிவாக புரியும். ஆனால் அவர் எல்லா முடிவுகளையும் மிகச் சீக்கிரத்தில் எடுக்க கூடியவர். நாம் இதையெல்லாம் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -