வங்கதேச டி20.. ரிங்கு சிங் அந்த வீரர் கூட ஓபனிங் வருவார்.. இப்படியொரு காரணம் இருக்கு – சபா கரீம் பேட்டி

0
82
Rinku singh and Saba karim

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. சூரியகுமார் தலைமையிலான இந்திய டி20 அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாக தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் இந்திய அணியின் தொடக்க ஜோடி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றதால் சமீபத்தில் சூரியகுமார் யாதவ் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடினார். கடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற அபிஷேக் ஷர்மா இலங்கை அணிக்கு எதிரான அணியில் இடம் பெறாத நிலையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருக்கிறார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வாலுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்தியா இனி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் சூழ்நிலையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அபிஷேக் ஷர்மாவோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போவது யார்? என்ற கேள்வி எழும் நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் சபா கரீம் ரிங்கு சிங் அதற்கு சிறந்த தேர்வாக இருப்பார் எனவும்,தொடக்கத்தில் அவரது பேட்டிங் பங்களிப்பு சிறந்த நிலையில் வெளிவரும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அபிஷேக் ஷர்மாவுடன் ரிங்கு சிங்கை தொடக்க ஆட்டக்காரராக காண வலுவான வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னர் வரை ரிங்கு ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் களமிறங்கி விளையாடினாலும், அவரது திறமையை வெளிப்படுத்தி விளையாட போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. ரிங்கு சிங் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தால், அதிக பந்துகளை எதிர்கொண்டு விளையாடினால் தனது சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். எனவே அபிஷேக் ஷர்மாவோடு தொடக்கத்தில் களமிறங்கி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:இன்னும் 2 நாள்.. ஆனாலும் இந்திய அணி ஜெயிக்கலாம்.. ரோகித் முடிவால் கிடைத்த ஒரு வாய்ப்பு.. 2வது டெஸ்ட்

ஏற்கனவே அபிஷேக் ஷர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிலையில் தற்போது அவரோடு மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கும் தொடக்க வீரராக களம் கண்டால் அது இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை சந்தேகம் இல்லை.

- Advertisement -