இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமும் தற்போது ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டமும் முற்றிலுமாக தடைப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் கண்டிப்பாக டிராவை நோக்கி செல்லும் எதிர்பார்க்கப்படும் நிலையில் ரோகித் சர்மாவின் முடிவால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கூட ஒரு வாய்ப்பு உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் வேளையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். ஆனால் அதை சூழ்நிலை தடுக்கும் வகையில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் தொடர் மழையின் காரணமாக ஆட்டம் ஆனது ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்துள்ளது. எனவே இன்னமும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்தப் போட்டி ஏறத்தாழ டிராவை நோக்கி மட்டுமே செல்லும் என்று தெரிகிறது. அப்படி இந்த போட்டி டிராவில் முடிந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணிக்கு புள்ளிகள் போதுமானதாக இருக்காது.
இந்த சூழ்நிலையில் இரண்டு நாட்கள் ஆட்டம் வீதம் இருக்கும் நிலையில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார். எனவே முதல் வழியாக இந்தியா வங்கதேச அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி மிகப்பெரிய ரன்கள் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதற்குப் பிறகு மூன்றாவது இன்னிங்ஸில் வங்கதேச அணியை குறைவான ரன்களில் ஆல் அவுட் செய்ய வேண்டும் அல்லது வங்கதேச அணி நிர்ணயிக்கும் ரன்கள் இலக்கை இந்திய அணி விரைவில் எட்டிப் பிடித்து வெற்றி பெற வேண்டும்.
இரண்டாவது வழியாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பரஸ்பர ஒப்பந்தம் செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இன்னிங்ஸ்களை டிக்ளேர் செய்தால் நான்காவது இன்னிங்ஸில் இந்திய விளையாடும் போது முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி நிர்ணயித்த ஸ்கோரை அதிரடியாக விளையாடி வெற்றி பெற வழிவகுக்கும். ஆனால் இது இந்திய அணிக்கு எதிராக முடியவும் வாய்ப்பு உள்ளது. வங்கதேச அணி விரைவாக இந்திய அணியை ஆல் அவுட் செய்தால் இந்திய அணி தோல்வி அடையும்.
இதையும் படிங்க:இந்தியா டி20.. பங்களாதேஷ் அணி அறிவிப்பு.. ஷாகிப் நீக்கம்.. 3 நட்சத்திர வீரர்கள் வருகை.. புது அணுகுமுறை
இந்த இரண்டாவது வழியை 2000ஆம் ஆண்டு ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் வழியில் வெற்றி பெற காரணமாக இருப்பது ரோகித் சர்மா டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீசத் தீர்மானித்த முடிவு ஆகும். ரோகித் சர்மா எடுத்த முடிவால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு அமைந்துள்ளது.