வெறும் 1 மாதம்.. இந்திய வீரரை கோச் பதவியிலிருந்து தூக்கிய கென்யா கிரிக்கெட்.. காரணம் என்ன.?

0
6349

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டோட்டா கணேஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கென்யா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று செயல்பட்டு கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் கென்யா கிரிக்கெட் வாரியம், டோட்டா கணேசை திடீரென தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான டோட்டா கணேஷ் இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிருக்கிறார். உள்ளூர் தொடர்களில் கர்நாடகா அணிக்காக விளையாடி இதுவரை 2548 ரன்களும், 493 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் கென்யா அணி டோட்டா கணேஷை தலைமை பயிற்சியாளராக அறிவித்தது.

டோட்டா கணேஷ் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் கென்யா அணியை டி02 மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பைகளுக்கு தகுதி பெறுவதே முதன்மையான குறிக்கோள் எனவும் அதற்காக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தப் போவதாகவும் நடைமுறை ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாகவும் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது டோட்டா கணேஷின் நியமனம் ஒழுங்கற்ற முறையில் நடந்துள்ளதாகவும் இதனால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கிரிக்கெட் கென்யா கிரிக்கெட் நிர்வாக தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இது குறித்து கடிதத்தின் மூலமாக வெளிவந்துள்ள அறிக்கையில் “28 ஆகஸ்ட் 2024 புதன்கிழமை அன்று நிறைவேற்றப்பட்ட கென்யா கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் கிரிக்கெட் கென்யா அரசியலமைப்பின் 5.9 மற்றும் 8.4.3 பிரிவுகளின் கீழ் கூற வருவது என்னவென்றால் உங்கள் நியமனத்தை ஏற்க கென்யா கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம். நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தால் ஆண்கள் தலைமை பயிற்ச்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கிறோம்” என்று அந்த கடிதத்தில் வெளிவந்துள்ளது.

டோட்டா கணேஷின் நியமனம் ஒழுங்கற்ற முறையில் நடைபெற்றுள்ள நிலையில் வெளிவந்துள்ள கடிதத்தில் மற்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் சார்பாக கிரிக்கெட் கென்யாவின் மகளிர் நிர்வாக இயக்குனர் பேர்லின் ஒமாமி கையெழுத்துட்டு இருக்கிறார். இந்த நிலையில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சேலஞ்ச் லீக் குரூப் ஏ சுற்றில் பங்கேற்க தற்போது கென்யா அணியின் பயிற்சியாளர்களாக லாமெக் ஒன்யாங்கோ & ஜோசப் அங்காரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:போன முறை ஹீரோ.. ஆனா ஸாரி இனிமே அந்த பையன்.. இந்திய அணிக்கு வர வாய்ப்பில்ல – ஆகாஷ் சோப்ரா நேரடி பேச்சு

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஒருவரை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கென்யா கிரிக்கெட் அமைப்பு நீக்கி இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -