இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரை வென்றது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் அணியில் செய்த மாற்றங்கள் என்ன? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
தற்பொழுது சியட் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய வீரர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருது நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தோல்வி மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.
பரிசோதனை முயற்சிகளும் விமர்சனமும்
ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இணைந்த பிறகு இந்திய அணியில் நிறைய பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை இந்திய அணி இழந்தது. தொடர்ந்து அதே ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை அரை இறுதியில் தோல்வி அடைந்தது.
ஆனால் இவர்கள் செய்த பரிசோதனை முயற்சி தான் 2023ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை வெல்ல வைத்தது. மேலும் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் பத்து ஆட்டங்களை தொடர்ந்து வென்று இறுதிப் போட்டியில் நுழைய வைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது.
எதையும் மாற்ற விரும்பவில்லை
தற்போது இது குறித்து பேசி இருக்கும் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “உண்மையாக நான் அணியில் எந்த மாற்றத்தையும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் உருவாக்க விரும்பவில்லை. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நாங்கள் சிறந்த பிரச்சாரத்தை கொண்டு இருந்தோம். ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி அந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடியது.
தொடர்ந்து நாங்கள் 10 ஆட்டங்களில் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு, நாங்கள் செய்த தயாரிப்புகள், திட்டமிடல்கள், செயல்படுத்துதல் போன்றவைகளில் இருந்து பெரிதாக வேறு எதையும் எங்களால் அந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் செய்திருக்க முடியாது. நாங்கள் தேவையான எல்லாவற்றையுமே செய்தோம்.
இதையும் படிங்க : 5 ஐபிஎல் கோப்பை சும்மா இல்ல.. உலக கோப்பை ருசி கண்டுட்டோம் இனிதான் இருக்கு – ரோகித் சர்மா பேட்டி
நான் அணியில் எதையும் வித்தியாசமாக செய்ய அதற்கு மேல் முயற்சி செய்யவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் நாங்கள் இதற்கு மேல் என்ன வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று கேட்டு இருப்பேன். 2024 டி20 உலகக் கோப்பையில் எங்களிடமிருந்த பொதுவான கருத்து என்னவென்றால் நாம் செய்வதை சரியாக செய்ய வேண்டும். அதே ஆற்றலை அதே அதிர்வை கொண்டு வர வேண்டும். அணிக்குள் நல்ல சூழல் மீண்டும் நிலவ வேண்டும். பின்னர் எங்கள் வழியில் சென்றோம் அதிர்ஷ்டமும் எங்களுக்கு இருந்தது” என்று கூறியிருக்கிறார்.