சங்கக்காரா என்னை இத சொல்லி ஸ்லெட்ஜிங் பண்ணுவாரு.. அப்போ இருந்த இலங்கையே வேற – நாசர் ஹுசைன் பேட்டி

0
32

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை விட 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது இருக்கும் இலங்கை அணியை முந்தைய காலகட்டத்தில் இருந்த இலங்கை அணி ஒப்பிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடைசியாக தனது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்று விட்டு அதே உத்வேகத்தோடு தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் இலங்கை அணி சற்று முன் வரை 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களோடு களத்தில் இருக்கிறது. 107 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியை வீழ்த்த அதிக ரன்கள் இலக்காக செட் செய்ய வேண்டியது அவசியம். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் முந்தைய இலங்கை அணியில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே போன்ற வீரர்கள் தன்னைத் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்வார்கள் என்றும் தற்போதைய இலங்கை அணியில் அது போன்று இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எனக்கு இலங்கை அணியுடன் விளையாடியது குறித்து நினைவுக்கு வருகிறது. அவர்களுக்கு எதிராக விளையாடும் போது அவர்களின் கவனம் எப்போதும் வேறு ஒரு லெவலில் இருக்கும். அவர்கள் களத்திற்கு வெளியே அழகானவர்கள், சாந்தமானவர்கள் மற்றும் அமைதியானவர்கள். ஆனால் களத்திற்கு உள்ளே வந்து விட்டால் குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே போன்ற வீரர்கள் உங்களுக்கு பின்னால் இருப்பார்கள்.

‘உங்கள் கடைசி டெஸ்ட் போட்டியை அனுபவித்து விளையாடுங்கள்’ என்று குமார் சங்ககாரா என்னை எல்லா வகையிலும் கிண்டல் செய்வார். இந்த டெஸ்டில் ஒருவேளை இலங்கை அணி தோற்றால் வெள்ளிக்கிழமை அன்று முதல் ஒரு மணி நேரத்தை பார்த்துவிட்டு தங்கள் இந்த டெஸ்ட்டுக்கு முழுவதாக தயாராக இருந்தோமா என்று தங்களை தாங்கள் கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால் முதல் இரண்டு நாட்களில் அவர்கள் வெளிக்காட்டிய போராட்ட குணத்திற்கு தற்போது முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

இதையும் படிங்க:ஷிகர் நீங்க என்னோட இடத்துக்கு வந்ததுமே.. அத செஞ்சிங்க.. மறக்க மாட்டேன் – ஷேவாக் வாழ்த்து

டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு கை மல்யுத்தம் போன்றது எந்த நேரத்திலும் உங்களுக்கு கவனிச்சித்தல் வரக்கூடாது. அவர்கள் இந்த விளையாட்டின் தொடக்கத்திற்கு கிட்டத்தட்ட தயாராக இல்லை” என்பது போல் தெரிகிறது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -